செக்ஸ் சாமியார் நித்யானந்தா சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் ஆபாசமாக இருந்த வீடியோவை வெளியிட்ட நித்தியானந்தாவின் உதவியாளர், அந்த வீடியோவை தான் படம் பிடிக்கவில்லை என்று மறுத்துள்ளார்.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை ரஞ்சிதா, கடந்த 2 நாட்களுக்குமுன்பு பெங்களூரு நீதிமன்றத்தில் ஆபாச வீடியோவை வெளியிட்ட லெனின் மீது பரபரப்பான குற்றச்சாட்டுக்களை கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.
நித்யானந்தாவுடன் வீடியோவில் ஆபாசமாக இருப்பது நானில்லை. லெனின் என்னை வன்புணர முயன்றார். நான் அதற்கு ஒத்துழைக்காததால் கிராபிக்ஸ் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார் என்றும் நடிகை ரஞ்சிதா கூறினார். இதனிடையே கடலூரைச் சார்ந்த சுப்ரியானந்தா என்ற நித்யானந்தாவின் பெண் சீடர் ஒருவரும் லெனின், தன்னை கற்பழிக்க முயன்றதாக புகார் தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தாவின் நெருக்குதல்களால் தன்மீது தொடர்ந்து பொய்க்குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது குறித்து கருத்து சொன்ன லெனின் கருப்பன், “நித்யானந்தா மீதான வழக்குகள் வலுவாக உள்ளன.விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டால் அவருக்கு 30 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்பதால் என்மீது பொய் அடுத்தடுத்து புகார் கொடுத்துள்ளனர்.
நித்யானந்தாவின் படுக்கையறைக்குள் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்த என்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் கூறியிருந்தனர். இது தொடர்பாக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உண்மையில் அந்த வீடியோவை நானே எடுக்க வில்லை. எனக்கு கிடைத்த வீடியோ காட்சியை மட்டுமெ வெளியிட்டேன். அவ்வளவுதான்’’என்று தெரிவித்துள்ளார்.
Filed under: பொதுவானவை | Tagged: செக்ஸ்-சாமியார்-நித்திய�%-2 |
மறுமொழியொன்றை இடுங்கள்