விக்கிலீக் – தகவல் கசிவு இல்லை;இது அமெரிக்கா நடத்தும் திட்டமிட்ட நாடகம்:நஜாத்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக் இணையதளம் வெளியிட்டது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த ஈரான் அதிபர் அஹமதி நஜாத், இந்தத் தகவல்கள் கசியவில்லை. இவை வெளியிடப்பட்டுள்ளன. இது திட்டமிட்ட நாடகம் என்று கூறியுள்ளார்.

ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நஜாதிடம் பிரஸ் தொலைக்காட்சி விக்கிலீக் மூலம் தகவல்கள் கசிந்தது குறித்து கேட்டபோது, “நான் உங்கள் கூற்றைச் சரி செய்ய விரும்புகிறேன். இந்த ஆவணங்கள் கசியவிடப்படவில்லை. இவை ஒரு ஒழுங்கமைப்பில் வெளியிடப்பட்டுள்ளன” என்று கூறினார்.

இந்த ஆவணங்களை வெளியிட்டதே அமெரிக்க அரசுதான். இதன் மூலம் அவர்களாகவே தீர்ப்பு எழுத விரும்புகின்றனர். இந்த ஆவணங்களுக்கு சட்ட மதிப்பு எதுவும் இல்லை. இந்த ஆவணங்களை வெளியிட்டதன் மூலம் அமெரிக்கா விரும்பும் அரசியல் மாற்றங்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை என்றும் ஈரானிய அதிபர் நஜாத் கூறினார்.

விக்கிலீக்ஸ் கசியவிட்டதாகக் கூறப்படும் இந்த நாடகமே கருத்து சொல்வதற்குத் தகுதியானதல்ல. இதனை ஆராய்வதன் மூலம் தங்களுடைய நேரத்தை விரயம் செய்ய எவரும் விரும்பமாட்டார்கள் என்றும் நஜாத் கூறினார்.

வளைகுடாப் பகுதியில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் மற்ற நாடுகளுடன் நட்பாகவே உள்ளன. இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதன் மூலம் நட்பு நாடுகளிடையே உறவுகள் பாதிக்காது என்றும் அவர் கூறினார்.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டும் என்று சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவை வலியுறுத்தியதாக வெளியான தகவலை மறுத்த நஜாத், இது ஈரானை மனோ ரீதியாக தாக்கும் அமெரி்க்காவின் போர் தந்திரமே என்று குறிப்பிட்டார்.

சித்தி மனீலா பாடலுக்கு எதிராக ஊடக அமைச்சர் நடவடிக்கை.

காலம் கடந்து ஞானம் பிறந்த நிர்வாக சபையினர்.

இலங்கை விடி வெள்ளி பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியை பாத்திமா ஷாஹினா என்ற சகோதரி அனுப்பியிருந்தார்.அதையே நாமும் வெளியிடுகிறோம்.

rasmin misc

அதிபர் ஒபாமா இஸ்லாத்தை தழுவ ஒபாமாவின் பாட்டி பிராத்தனை

ரியாத் : அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று தான் பிராத்தித்ததாக  ஹஜ் செய்வதற்காக சவூதி அரேபியா வந்திருக்கும் கென்யாவை சார்ந்த அவரின் பாட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தன்னுடைய ஹஜ் கடமையை முடித்து விட்டு ஜெத்தாவில் அல்-வதான் பத்திரிகைக்கு பேட்டி அளித்த பராக் ஒபாமாவின் 80 வயதான பாட்டி ஹாஜா சாரா ஒமர் “ என் பேரன் பராக் ஒபாமா இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று பிராத்தனை செய்தேன்” என்று கூறினார்.

ஹாஜா சாரா ஒமர் தன் மகனும் ஒபாமாவின் மாமாவுமான சயீத் ஹுசைன் ஒபாமா மற்றும் தன் நான்கு பேரக்குழந்தைகளுடனும் சவூதி அரசரின் சிறப்பு விருந்தினர்களாக ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமாவின் அரசியல் குறித்து தான் புனித யாத்திரையின் போது எக்கருத்தையும் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறினார்.

மீண்டும் வெள்ளை மாளிகைக்கு ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவாரா என கேட்டதற்கு எதிர்காலத்தை அறியும் ஆற்றல் தனக்கு இல்லை என்றும் அல்லாஹ் ஒருவனே அதை அறிவான் என்றும் கூறினார். மேலும் நோய் வாய்ப்பட்டுள்ள சவூதி அரசர் விரைவில் குணம் பெற வேண்டும் என்றும் பிராத்தித்ததாகவும் கூறினார்.

இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புள்ள சகோதர, சகோதரரிகளே மேற்கண்ட தலைப்பை படித்தவுடன் ஒரு நிமிடம் நீங்கள் மிரண்டுவிட்டீர்களா? நீங்கள் மட்டுமல்ல இஸ்லாத்தை ஏற்ற ஒவ்வொருவனும் இந்த தலைப்பை கண்டு மிரளத்தான் வேண்டும் ஏனெனில் இந்த கேள்வியை கேட்பவன் நானல்ல மாறாக உங்களை படைத்து பரிபாலித்து பக்குவப்படுத்திய இறைவனாகிய அல்லாஹ்! (அல்ஹம்துலில்லாஹ்)

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து தனது மனைவியையும் தனது பிள்ளையையும் சுடும் பாலைவன மணலில் தவிக்க விட்டார் பின்னர் அல்லாஹ் விடமிருந்து கட்டளை வந்ததும் மீட்டுவந்தார், அடுத்ததாக  அல்லாஹ்வின் மற்றொரு கட்டளைக்கு அடிபணிந்து தனது அருமை மகனை அறுத்து பலியிட துணிந்தார் இறுதியாக அல்லாஹ்வுடைய கட்டளை வந்ததும் பலி பிராணியை அறுத்து தன் மகனை மீட்டார்! இப்படிப்பட்ட மாநபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கம்தான் இஸ்லாம் அதனை பின்பற்றக் கூடியவர்கள்தான் முஸ்லிம்கள். ஆனால் இந்த மாநபியும் இவருக்கு பின்னால் வந்த அனைத்து நபிமார்களுக்கும்  இறுதியாக வந்த இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் பின்பற்றும் முஸ்லிம்களாக நாம் இன்று வாழந்து வருகிறோமா? மேலும் படிக்க…

திருமணமாகாத இளம்பெண்கள் செல்ஃபோன் உபயோகிக்கத் தடை !

 

 

 

 

 

 

 

 

 

முஸஃபர் நகர்: திருமணமாகாத இளம்பெண்கள் காதல் வலையில் சிக்கி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைத் தடுக்கும் முகமாக, அவர்கள் செல்ஃபோன் உபயோகிக்க கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ள சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தின் முஸஃபர் நகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸஃபர் நகர் மாவட்டத்திலுள்ள லன்க் என்ற கிராமத்தில் அனைத்து சாதி மற்றும் மத பஞ்சாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து செல்ஃபோனால் இளம்பெண்களுக்கு ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விவாதித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

திருமணமாகாத இளம்பெண்கள் காதல் வலையில் சிக்கி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைத் தடுக்கும் முகமாகவே இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கிராம பஞ்சாயத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர் கூறினார்.

திருமணமாகாத இளம்பெண்களையும், கணவனை இழந்த விதவைப் பெண்களையும், வெளிநாட்டில் பணிபுரியும் கணவன்மார்களின் மனைவிகளையும் குறி வைத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சமூக விரோத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இது போன்ற பெண்களுக்கு தவறவிட்ட செல்பேசி அழைப்பு (மிஸ்டு கால்) கொடுப்பது, பின்னர் அதன் மூலம் ஏற்படும் தொடர்பை பயன்படுத்தி அவர்களை தங்கள் காம வலையில் சிக்க வைத்து அவர்களது வாழ்வை சீரழிப்பது, அதன் பிறகு அவற்றை வீடியோக்களில், நிழற்படங்களில் பதிவு செய்து அவர்களை மிரட்டி அவர்களது பணம், நகைகளை சூறையாடுவது, இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன் நண்பர்களுக்கும் அவர்களை இரையாக்குதல், விபச்சார விடுதிகளில் அவர்களை விற்று விடுதல் போன்ற சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுவதை அன்றாடம் செய்திகளில் பார்க்க நேரிடுவது குறிப்பிடத்தக்கது.

ஆண் விபச்சாரிகள் ஆணுறைகளைப் பயன்படுத்தலாம்-போப் 16ம் பெனடிக்ட்

ஆணுறைகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான நிலையைக் கொண்டுள்ள போப் 16ம் பெனடிக்ட், விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள் ஆணுறைகளைப் பயன்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.ஆணுறைகளின் பயன்பாட்டுக்கு எதிரான நிலையைக் கொண்டுள்ளது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாட்டிகன். இது ஐ.நா, ஐரோப்பிய நாடுகள், எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரக் குழுக்களின் கண்டனத்தை சம்பாதித்தது.

குறிப்பாக ஆணுறைகளுக்கு எதிரான நிலையை எடுத்துள்ள போப்பாண்டவருக்கு எதிரான விமர்சனங்களும் வலுத்தபடி உள்ளன. ஆணுறைகள் குறித்து போப்பாண்டவர் முன்பு ஒருமுறை கூறுகையில், ஆணுறைகளை கொடுப்பதன் மூலம் எய்ட்ஸையும், எச்ஐவி பரவலையும் தடுத்து நிறுத்தி விட முடியாது. மாறாக ஆணுறைகளால் நிலைமை மோசமாகத்தான் செய்யும் என்றார்.

இந்த நிலையில், திடீரென தற்போது ஆணுறைகளுக்கு ஆதரவான கருத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார் போப்பாண்டவர். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண் விபச்சாரிகள் ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று கூறியுள்ளார்.

ஜெர்மன் நாட்டு பத்திரிக்கையாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியின்போது இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.

செயற்கைக் கருத்தரித்தல் முறை என்பதால் ஆணுறைகளுக்கு எதிரான நிலையை வாட்டிகன் மேற்கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவில் பல தார முறை அமலில் இருப்பதாலும், பாதுகாப்பற்ற உடலுறவு அங்கு படு சாதாரணம் என்பதாலும் அங்குதான் உலகிலேயே அதிக அளவில் எய்ட்ஸ் தாக்குதல் உள்ளது.

ஆனால் ஆப்பிரிக்காவில் ஆணுறைகளை கொடுப்பதன் மூலம் எய்ட்ஸைத் தடுத்து விட முடியாது என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து கடந்த ஆண்டு அவர் கூறுகையில், ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் அதிகம் இருக்கிறது என்பதற்காக ஆணுறைகளைக் கொடுத்து அதைத் தடுத்து விட முடியாது. அது சாத்தியமும் அல்ல. ஆணுறைகளைக் கொடுப்பதால் பிரச்சினை தீரும் என்று கூற முடியாது. மாறாக மோசமாகலாம் என்று கூறியிருந்தார் போப்பாண்டவர்.

நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டு கடன் திட்டத்தில் குளறுபடி

கடையநல்லூரில் நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டு கடன் திட்டத்தில் குளறுபடி ஏற்பட்டதால் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தமிழக அரசு கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்காக கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதுபோல் நகர்ப்புறத்தில் வாழும் சாமானிய மக்களுக்காகவும் மானிய வட்டியுடன் கூடிய வீட்டு கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி காலிமனை வைத்திருப்பவர்கள் மாத வருமானம் ரூ.5 ஆயிரம் வரை இருந்தால் ரூ.1 லட்சமும், 5 ஆயிரத்திற்கும் மேல் இருந்தால் ரூ.1 லட்சத்து 60 ஆயிரமும் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. இதற்கான வட்டியில் மானிய மும் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயன்பெற கடையநல்லூர் நகராட்சியில் 2,500 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் இத்திட்டத்திற்கான பயனாளிகளிடம் இருந்து கலெக்டர் ஜெயராமன் கடந்த மாதம் நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண் டார்.
மனுவுடன் வருமான சான்றிதழ், வில்லங்க சான்றி தழ் இணைக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் நலன் கருதி வருவாய்த்துறையினரே ஒவ்வொரு பகுதியிலும் முகாம் அமைத்து வருமான சான்றிதழ் வழங்குவதற்கு கலெக்டர் ஆணை பிறப்பித்தார். இதன்படி கடையநல்லூர் நகராட்சியில் வருமான சான்றிதழ் வழங்குவது குறித்த முகாம் நேற்று முன்தினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நக ராட்சி அலுவலகத்தில் குவிந்தனர். ஆனால் மாலை வரை வருவாய் அலுவலர்கள் யாரும் வரவில்லை.
பொறுமையிழந்த பொதுமக்கள் ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட் டது. தகவல் அறிந்ததும் தென்காசி தாசில்தார் விஜயா மற்றும் அலுவலர்கள் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். பயனாளிகள் கிராம நிர்வாக அதிகாரி, வரு வாய் அலுவலரிடம் உரிய சான்று பெற்று தென்காசி தாலுகா அலுவலகத்தில் வரு மான சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
பொதுமக்களின் நலன் கருதி அந்தந்த பகுதிகளிலே முகாம் அமைத்து வருமான சான்றிதழ் வழங்க கலெக்டர் ஆணையிட்ட நிலையில், தாசில்தாரின் புதிய அறிவிப்பு பொதுமக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இத்திட்டத்தின் கீழ் கடன்பெற காலதாமதம் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர் நகராட்சி முற்றுகை
பொதுமக்களின் நலன் கருதி அந்தந்த பகுதிகளிலே முகாம் அமைத்து வருமான சான்றிதழ் வழங்க கலெக்டர் ஆணையிட்ட நிலையில், தாசில்தாரின் புதிய அறிவிப்பு பொதுமக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இத்திட்டத்தின் கீழ் கடன்பெற காலதாமதம் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சாமியாருக்கு கூன் போடும் குடியரசு தலைவர் – இந்திய நாட்டின் அவள நிலை…

படத்தில் இருப்பது புட்டபருத்தி சாய்பாபா! இந்த சாமியார் ஒரு டுபாகூர் பேர்வலி என்பதை பிபிசி செய்தி நிறுவனம், விடியோ ஆதாரத்துடன் வெளி்யிட்டு இவனின் உண்மை முகத்தை மக்களுக்கு தோலுரித்து காட்டி இருக்க, இந்திய நாட்டின் முதல் குடிமகனாக கருதப்படும் குடியரது தலைவர் இந்த சாமியாருக்கு கூன் போடும் காட்சி நேற்று சாமியாரின் பிறந்த நாளையோட்டி நடைபெற்ற மகளீர் நிகழ்ச்சியில் நிகழ்ந்துள்ளது. இதில் இன்னும் கொடுமையான விசயம் என்வெனில் 23 ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த சாமியாரின் பிறந்தாள் விழாவுக்கு பாரத நாட்டின் பிரதர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறாராம்.

இந்த சாமியார் மக்களை ஏமாற்றுகிறான் என்பதை பிபிசி வீடியோவை பார்க்கும் பாமரனும் புரிந்து கொள்வான் என்றிருக்க பாரத பிரமருக்கும் குடியரசு தலைவருக்கு புரியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.

நாட்டின் தலைவர்கள் சாமியார்களிடம் தங்களது அறிவை அடகு வைக்கும் நிலை மாறினால் தான் நாடு முன்னேறும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து..

படம்-பாதுஷா,tntj.net

சென்னையில் கண்காணிப்பு கேமரா: போக்குவரத்து அபராத தொகையை வசூலிக்க புதிய திட்டம்; கிரெடிட் கார்டு, வங்கியில் செலுத்தலாம்

சென்னை கோட்டூர்புரம் உள்பட 12 இடங்களில் தற்போது இந்த கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. சந்திப்பில் இருந்த படியே 24 மணி நேரமும் போக்குவரத்தை கண்காணிக்கும் இந்த கேமராக்கள் ஏற்கனவே 17 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

கோட்டூர்புரத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவை போக்கு வரத்து கூடுதல் கமிஷனர் ரவி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
12 இடங்களில் கண்காணிப்பு கேமரா: போக்குவரத்து அபராத தொகையை     வசூலிக்க புதிய திட்டம்;    கிரெடிட் கார்டு, வங்கியில் செலுத்தலாம்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்து கண்காணிப்பு “கேமரா” அறி முகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 216 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளது. மேலும் 25 இடங்களில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 17 இடங்களில் கண் காணிப்பு கேமிரா மூலம் போக்குவரத்து கண்காணிக்கப்படுகிறது. தற்போது அந்தந்த சந்திப்புகளில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கும் வசதி இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
உலக வங்கி அளித்துள்ள ரூ.4 1/2கோடி நிதி உதவியில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்தை சுற்றி வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப விளக்குகள் தானாக மாறும் நவீன சிக்னல்களும் நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன கோமராக்கள் நிறுத்த கோட்டை தாண்டி நிற்கும் வாகனங்களை படம் பிடித்து காட்டும். விதிமுறையை மீறிய வாகனங்ளுக்கு அனுப்பப்படும் அபராத சம்மனில் அந்த காட்சி இடம் பெறும்.
ஜனவரி முதல் இது வரை போக்குவரத்து விதிமுறை களை மீறியதாக 9 லட்சத்து 16 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.7 கோடியே 74 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சி.சி.டி.வி. மூலம் இது வரை 60 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் மூலம் ரூ.9 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக 1500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிகளை மீறியதாக 60 மாநகர பஸ்கள் சிக்கியுள்ளன. போக்குவரத்து கழகத்திடம் இருந்து ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபாராத தொகை வசூலிப்பதில் போலீசார் மீது அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. இது போன்ற தவறுகள், முறை கேடுகளை தடுக்க “இ.சலானிங்” திட்டம் நடை முறைக்கு வர இருக்கிறது. இன்னும் 3 மாதத்தில் இத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு உலக வங்கி நிதி உதவி அளிக்கிறது.
இதில் பதிவாகும் வாகனங்கள் குறித்த தகவல் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அனுப்பப்படும். அபராத தொகையை நேரில் செலுத்த தேவையில்லை. வங்கியிலோ, அல்லது கிரெடிட் கார்டு மூலமோ செலுத்தலாம்.
குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக இதுவரை 18 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட சாலை விபத்து இந்த ஆண்டு குறைந்துள்ளது. போக்கு வரத்து விதிமுறைகள் தீவிரமாக நிறைவேற்றப்பட்டதால் கொடுங்காயம் அடைந்தோர் எண்ணிக்கையும் ஆயிரம் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நவீன கேமராக்கள் சாந்தோம் சந்திப்பு, அண்ணா சாலை வெலிங்டன், ஆலிவர் ரோடு, டி.டி.கே. சாலை சந்திப்பு, அண்ணா சாலை செனடாப் சாலை சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை சந்திப்பு, ஈ.வி.ஆர். சாலை, தாசப்பிரகாஸ் சந்திப்பு, ராயப்பேட்டை பாயிண்ட், ஆரிய மன்றம், டவுட்டன் சந்திப்பு, மூப்பனார் மேம்பாலம், திருமங்கலம், அம்பத்தூர் எஸ்டேட் ரோடு சந்திப்பு, பெரியமேடு லெவல் கிராசிங் சந்திப்பு ஆகிய 12 இடங்களில் பொறுத்தப்பட்டுள்ளது.

மாலேகான் குண்டு வெடிப்புக் குற்றவாளி சுவாமி ஆசிமானந்த் கைது!

Ajmer Image

மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படும் சுவாமி ஆசிமானந்தை சிபிஐ வெள்ளிக் கிழமையன்று கைது செய்தது.

சுவாமி ஆசிமானந்த் கடந்த இரண்டு நாள்களாக சிபிஐ மற்றும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினர் ஆகியோரின் தேடுதல் வேட்டையில் சிக்காமல் தப்பித்து வந்தார்.

குஜராத் மாநிலம் டாங்ஸ் பகுதியில் வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற பெயரில் ஆசிமானந்த் ஆசிரமம் நடத்தி வருகிறார். நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கும் இந்த ஆசிரமத்தில் வைத்தே திட்டம் தீட்டப்பட்டது என காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தப் பகுதியில் பழங்குடியினருக்காக பள்ளி ஒன்றையும் ஆசிமானந்த் நடத்தி வருகிறார். கிறிஸ்தவ ஆதிவாசிகளை இந்து மதத்திற்கு மாற்றும் பணியையும் இவர் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

காவித் தீவிரவாத நெட்வொர்க்கின் மூளையாகக் கருதப்படும் சுனில் ஜோஷியுடன் ஆசிமானந்துக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ முன்னாள் அதிகாரி புரோஹித் மற்றும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா ஆகியோருடனும் ஆசிமானந்த்துக்கு தொடர்பு உள்ளதாகக் காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.