இஸ்லாமிய பங்கு வர்த்தகம் – மும்பையில் அறிமுகம்

 

 

 

 

 

 

 

 

 

 

மும்பை: மும்பை பங்கு சந்தையில் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வசதியை தக்வா அட்வைசரி & சரீஅத் சொலுசன்ஸ் என்ற அமைப்புடன் இனைந்து மும்பை பங்கு சந்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் இஸ்லாமிய நிதி கொள்கைகளை பின்பற்ற கூடியவையாக இருக்கும். இதில் தற்போது டாடா கன்ஷல்டன்ஸி சர்வீஸஸ், பாரதி டெல், ரிலையன்ஸ், மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் இனணைந்துள்ளன. இஸ்லாமிய பங்கு வர்த்தகத்தில் இணையும் நிறுவனங்கள், தக்வா அட்வைசரி நிறுவனத்தின் கடுமையான பரிசீலனைக்கு பிறகே வர்த்தகத்தில் ஈடுபட முடியும். இதில் இனைய விரும்பும் நிறுவனங்கள், மது, சூதாட்டம், வட்டி  போன்ற வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.

இந்த பங்கு வர்த்தகத்தில் மத ரீதியான எந்த வித தடங்கலும் இல்லை. யார் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். ஆரம்பித்த நாள் முதல் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்து இருப்பதாக மும்பை பங்கு சந்தை தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு, இந்தியாவில் முஸ்லிம்களி நிலை குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி, முஸ்லிம்கள் முதலீட்டு விவகாரங்களில் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்று கூறியிருந்தது.

inneram.com

சவூதி சிமெண்ட் நிறுவனத்திற்கு பொறியாளர்கள், டெக்னிஷியன்கள் தேவை

(Free Recruitment)

மும்பை : சவூதி சிமெண்ட் நிறுவனத்திற்கு கீழ்கண்ட பொறியாளர்கள், டெக்னிஷியன்கள் தேவைப்படுகின்றனர். நேர்முக தேர்வு         ஹைதராபாத்தில் ஜனவரி 1,2 அன்றும் மும்பையில் ஜனவரி 6,7 அன்றும் நடைபெற உள்ளது. தகுதி உள்ளவர்கள் 022 66665308 / 66665367 எனும் எண்ணுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிபடுத்தி கொண்டு செல்லவும்.  தகுதி உள்ளவர்கள் நேரிடையாகவும் செல்லலாம். ஆனால் அப்படி செல்பவர்களுக்கு பயணப்படி கிடைக்காது.

Interviews Details are as follows:

HYDERBAD

Date of Interview Position
1st Jan 2011 &  2nd Jan 2011 Chief Engineer, Mechanical
Draftsman, Mechanical
Engineer, Mechanical
Foreman, Mechanical
Foreman, Mechanical (Workshop)
Fitter
Rigger
Electronics Technician
Engineer, Electronics
Electrician
Engineer, Electrical
Engineer, WMRD
Foreman, Quarry Operations
H.E. Mechanic
Technical Executive
Venue: C/O GGheewala HR Consultnats 

2nd Floor, Hira Mansion,

Opp. Paigah Plaza

Basheerbagh,

Hyderabad – 500 063

MUMBAI

Date of Interview Position
6th Jan 2011 &  7th Jan 2011 Chief Engineer, Mechanical
Draftsman, Mechanical
Engineer, Mechanical
Foreman, Mechanical
Foreman, Mechanical (Workshop)
Fitter
Rigger
Electronics Technician
Engineer, Electronics
Electrician
Engineer, Electrical
Engineer, WMRD
Foreman, Quarry Operations
H.E. Mechanic
Technical Executive
Venue: GGheewala HR Consultants 

202 A, Bombay Market, Tardeo Road,

Mumbai – 34

Tel: 022 66665335/ 66665367

PLEASE CALL AND REGISTER YOUR NAME FOR THE INTERVIEW. TEL. NO: 022 66665308 / 66665367

Dress Code: Official (Formal Shirt & Trousers, Formal Shoes)

Your CV should be exactly matching the job description mentioned on our website http://www.ggheewala.com/saudicement.asp . Your CV will be subject to prior screening by the SCC delegates and will be considered for the interview only if found suitable by them. The decision of the SCC delegates will be considered as final.

If you find your CV suitable for the position as per the Requirement of the company then you are requested to come directly as a Walk-in candidate at the Venue.

You are required to carry the following documents for the interview, in 3 sets.

  • Detailed, updated résumé.
  • Original / Copy of Educational Certificates.
  • Original / Copy of Work experience certificates.
  • Original / Copy of the relevant Training Courses Certificates.
  • Original / Copy of Passport, valid for the next 12 months, and ECNR Status. Saudi visa, if present, should not be valid.
  • 20 Photographs; White background; 4×6 cm.

Travel reimbursement will not be provided to walk-in candidates

inneram.com

துரோகம் செய்தவர்கள்!

தலித் மக்களை விட மோசமான நிலையிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பொருளாதாரத்திலும் தூக்கி நிறுத்த வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு.

தினமலர்.

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களும், முஸ்லீம்களின் நிலையும்.

Candlelight serviceவேதமுடையோரே! ஊங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே! ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. ஆல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

(அல்குர்ஆன் 4:171)
கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை கடவுளாகவும், கடவுளின் மகனாகவும், பரிசுத்த ஆவியாகவும் வணங்கி வருகிறார்கள். கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை ஈஸா (அலை) பிறந்த தினமாகக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த கிறிஸ்மஸ் பண்டிகையின் வரலாறை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கூட தெரியாது இருக்கிறார்கள்.
கிறிஸ்மஸ் பண்டிகையின் வரலாறு

மேலும் படிக்க…

பாம்பு கடி: 90 சதவீதத்தினர் பயத்தால் உயிரிழப்பு சுற்றுச்சூழல் சந்திப்பு நிகழ்ச்சியில் தகவல்!

பாம்பு கடிபட்டவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே, விஷத்தால் உயிரிழக்கின்றனர்; 90 சதவீதம் பேர், பயத்தால் உயிரிழக்கின்றனர், பல கோடி ஆண்டுகளுக்கு முன் பல்லியாக இருந்தவை, பரிணாம வளர்ச்சியில் பாம்புகளாக மாறியுள்ளன. பாம்பின் பழமையான புதைப்படிவம், சகாரா பாலைவனத்தில் உள்ளது. உலகில் 2,700 வகையான பாம்புகள் உள்ளன.

இந்தியாவில் 20 வகையான கடற்பாம்புகள் உட்பட 270 வகையான பாம்புகள் வாழ்கின்றன; இவற்றில், 62 பாம்புகள் மட்டுமே, விஷத்தன்மை கொண்டவை.கட்டு விரியன், நாகப்பாம்பு, கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகியவற்றுக்கு மட்டுமே, மனிதரைக் கொல்லும் அளவுக்கு விஷத்தன்மை உண்டு. இந்தியாவில், ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர், பாம்புக்கடியால் உயிரிழக்கின்றனர். இவர்களில், 10 சதவீதம் பேர் மட்டுமே, விஷத்தால் இறக்கின்றனர்; 90 சதவீதம் பேர், பயத்தால் சாகின்றனர்.விஷப்பாம்புகள் எல்லாக் கடிகளிலும் விஷத்தை உமிழ்வதில்லை. நாகப்பாம்பை விட, கட்டு விரியனின் விஷம், 15 மடங்கு வீரியமுள்ளது. கட்டு விரியன் கடித்தால், 45 நிமிடங்களில் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகும். கருப்பு உடலில் சீரான இடைவெளியில் இரட்டை வெள்ளைப்பட்டைகள் இருப்பதே, இதன் அடையாளம். கண்ணாடி விரியனின் விஷம், ரத்த அணுக்களை சேதப்படுத்தும்.சுருட்டை விரியன், ஒரே கடியில் 12 மில்லி விஷத்தை உமிழும். மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிகமாகக் காணப்படும் ராஜநாகம், தரையில் வாழும் விஷப்பாம்புகளில் மிக நீளமானது. மொத்தம் 19 அடி வரை இருக்கும்.

இது ஒரு கடியின்போது ஏழு மில்லி விஷத்தை உமிழும். ஒரு மனிதன் இறப்பதற்கு, 0.3 மில்லி விஷமே போதுமானது. இருப்பினும் இது அரிதிலும் அரிதாகவே மனிதரைக் கடிப்பதால், பெரும்பாம்புகள் பட்டியலில் இல்லை.கூர்மையான பார்வை கொண்ட ராஜநாகம், தூரமாக மனிதர்கள் வரும்போதே பார்த்து ஓடிவிடும். எனவே, இதனை “ஜென்டில்மேன் ஸ்நேக்’ என்பார்கள். இரவு அல்லது அதிகாலை நேரங்களில்தான், பாம்புக்கடி ஏற்படுவதால், எந்த வகையான பாம்பு கடித்தது என்று பலருக்கும் தெரிவதில்லை. இதைக்கண்டு பிடிக்க சில அடையாளங்கள் உள்ளன.விஷப்பாம்புகள் கடித்தால் மூச்சுத் திணறல் ஏற்படும்; கண் இமை மூடி விடும்; தூக்கம் வரும்; நாக்கு மரத்துப் போகும். கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் கடித்தால், கடிபட்ட இடத்தில் எரிச்சலும், ஈறுகளில் ரத்தக்கசிவும் ஏற்படும். விஷப்பாம்பு கடித்தால், இரண்டு பற்களின் அச்சு பதிந்திருக்கும்; விஷமற்ற பாம்பு கடித்தால், பிறை வடிவில் பற்கள் பதிந்திருக்கும்.பாம்பு கடித்தவுடன், கடித்த இடத்துக்கு மேலே கட்டுப்போடுவது, காயத்தைக் கீறி ரத்தத்தை உறிஞ்சுவது ஆபத்தானது. ரத்த ஓட்டம் தடைபட்டு, நிலைமை மேலும் சிக்கலாகும். காயத்தைக் கீறுவதால், ரத்தம் அதிகம் வெளியேறியும் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. கடிபட்ட இடத்தை அழுத்தாமலும், அசையாமலும் வைத்து, மிக விரைவாக மருத்துவமனை செல்வதே சிறந்தது; பயப்படுத்தாமல், நம்பிக்கை ஏற்படுத்துவது மிக முக்கியம்.பாம்புகள், உட்செவிகள் மூலமாகவும், அதிர்வுகள் மூலமாகவும் ஒலியை உணர்கின்றன.

மெல்லிய அதிர்வைக் கூட, பாம்புகள் உணர முடியும். ஆண் பாம்பைக் கவர, பெண் பாம்பு வாசனைத் திரவத்தை உமிழும். மனிதர்களால் பெண் பாம்பு கொல்லப்படும்போது, இந்த வாசனை வெளிப் பட்டே அங்கு ஆண் பாம்பு வரும். இதை பழி வாங்க பாம்பு வந்ததாக கதை பரப்புகின்றனர்.பாம்பு பால் குடிக்கும்; கண்ணைக் கொத்தும்; பழி வாங்கும் என்பதெல்லாம் அப்பட்டமான மூட நம்பிக்கை. மரங்களில் வாழும் விஷமற்ற கொம்பேறி மூக்கன் பாம்பு,கடித்தவர் இறந்து விட்டாரா என்று சுடுகாட்டில் வந்து பார்க்கும் என்பதும் மூடநம்பிக்கையே.

kadayanalluraqsha.com

நாகூர் தர்காவில் ரஜினி பிறந்த நாள் விழா?

வழிகேட்டிற்குள் வழிகேடு.
 

ஜின்னையும் இம்மனிதனையும் என்னைவணங்குவதற்காகவே தவிர(வேறு எதற்காகவும்) நான்படைக்கவில்லை.  (அல்குர்ஆன் 51 : 56)

வழிகேடுகளின் மொத்த உருவமாக திகழ்பவா்கள் அந்த வழிகேடுகளுக்குள்ளாக மீண்டும்இமீண்டும் வழிகேடுகளை செய்வதை அவதானித்திருப்போம்.
அந்த வகையில் இஸ்லாத்தில் இல்லாத கப்ரு வணக்கத்தை செய்யும் பரேலவி மதத்தினா் தங்களை ஒரு முஸ்லிமைப் போல் காட்டிக் கொள்வதும்இஅவர்களுக்கெதிரான ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு பதில் கொடுக்க முடியாமல் நாங்கள் கப்ருகளை வணங்கவில்லை ஸியாரத் தான் செய்கிறோம் என்று மழுப்பல் பதில்கள் சொல்லிக் கொண்டு அலைவதையும் நாம் தற்காலத்தில் கண்கூடாகக் கண்டுவருகிறோம்.
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யைநொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது.(இறைவனைப் பற்றி) நீங்கள்(தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.     (அல்குர்ஆன் 21 : 18)
கப்ரு வணக்கத்தை ஸியாரம் என்று வா்ணித்து வழிகேட்டிற்கு நபிவழிச் சாயம் புசுவதையே மேற்கண்ட வசனம் வண்மையாக கண்டிக்கிறது.
ரஜினியின் பிறந்த நாளும்,நாகூர் தர்காவும்.

நபிகள் நாயகம்(ஸல்)அவா்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதையே தடுக்கும் இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களையும் முஸ்லீம்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்தக் கப்ரு வணங்கிகள் வழிகேட்டின் உச்ச கட்டமாக வழிகேட்டிற்குள் இன்னொரு வழிகேடாக ரஜ்னி காந்திற்கும் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்கள்.
அண்ணிய பெண்களுடன் வெக்கம்இமானம் ஏதுமின்றி கட்டிப்பிடித்து ஆட்டம் போடும் ஒருவனுக்கு வக்காலத்து வாங்கும் இந்தக் கூட்டம்.
மீலாதுன் நபி விழாவை நாம் எதிர்க்கும் போது கேட்கும் கேள்வி நமது வழிகாட்டி நபிகள் நாயகத்தை புகழ்ந்து பாராட்டி அவா்களின் பிறந்த தினத்தை கொண்டாடினால் தவறா?
செய்யும் வழிகேட்டிட்கும் ஒரு வக்காலத்துக் கேள்வி வேறு.
ஒரு வார்த்தைக்காக நபியவா்கள் நமது வழிகாட்டி என்பதற்காக நபியவா்களை புகழ்ந்து பிறந்த நாள் கொண்டாடுகிறீர்கள்.அப்படியானால் ரஜ்னி காந்த் யார்?
இமய மலையும்,நாகூர் தர்காவும்.

இஸ்லாத்தின் பெயரால் செயல் படும் இந்த யுத கலாச்சார,இந்துத்துவ ஏஜன்டுகளுக்கும் இமய மலைக்கும் உள்ள தொடர்பு இப்போது தெரிகிறதா?
இமய மலையில் இருப்பதாக ரஜ்னிகாந்த் நம்பிக் கொண்டிருக்கும் பாபா என்ற கற்பனை தெய்வத்திற்கும் அவ்லியா என்று நாகூறில் போற்றப் படுபவரும் இரு தரப்பாருக்கும் ஒருவர்தான்.
அவா் வேறு,இவா் வேறு என்பது இந்த வழிகேடர்களுக்குள் இல்லை.
ரஜ்னி காந்தின் பாபாவையும் இவா்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
இவா்களின் நாகூர் தெய்வத்தையும் ரஜ்னி காந்த் ஏற்றுக் கொள்கிறார்.
கிருத்தவா்களை அடியொட்டி அவா்களின் வழியில் செல்லும் இவா்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ”அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா  நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”வேறெவரை?” என்று பதிலலித்தார்கள்.  (புகாரி (3456))
rasminmisc.blogspot.com

தாய் சாபம் விட்டால் பழிக்குமா?

தாய் சாபமிட்டால் பழிக்கும் என்பதை பின்வரும் செய்திலி­ருந்து விளங்கி கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல் களால் ‘ஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) ‘அவருக்கு நான் பதிலüப்பதா? தொழுவதா?’ என்று கூறிக் கொண்டார். (பதிலüக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், ”இறைவா! இவனை விபசாரிகüன் முகங்கüல்  விழிக்கச் செய்யாமல் மரணிக்கச்செய்யாதே!” என்று கூறி விட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தமது ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்து விட்டார். ஆகவே, (அவள் அவரைப் பழிவாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு ‘இது ஜுரைஜுக்குப் பிறந்தது’ என்று (மக்கüடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூ செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, ”குழந்தையே! உன் தந்தை யார்?” என்று கேட்டார். அக்குழந்தை, ”(இன்ன) இடையன்” என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்து கொண்ட அந்த மக்கள், ”தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ”இல்லை, கüமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறிவிட்டார். (மூன்றா மவர்) இஸ்ரவேலர்கüல் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று கொண்டி ருந்தான். உடனே அவள், ”இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்கு” என்று துஆ செய்தாள். உடனே, அந்தக் குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, ”இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கி விடாதே” என்று கூறியது. பிறகு அவளது மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. லிஇந்த இடத்தில் நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்ததுலி பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், ”இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே” என்று கூறினாள். உடனே அக்குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு, ”இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு” என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), ”ஏன் இப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டதற்கு அக்குழந்தை, ”வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடுங்கோலர்கüல் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) ‘நீ திருடிவிட்டாய்;  விபசாரம் செய்து விட்டாய்’ என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்ய வில்லை” என்று பதிலüத்தது.
நூல் புகாரி : 3436

இதே போன்று செய்தி திர்மிதியில் 3370  வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியில்

மூன்று நபர்களின் பிரார்த்தனைகள் உடனே ஏற்றுக் கொள்ளப்படும். அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனை பிரயானியின் துஆ பிள்ளைகளுக்கு எதிராக பெற்றோர்களின் துஆ ஆகிய முன்று நபர்களின் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூஹீரைரா ர­ அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனாலும் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர். என்றாலும் புகாரியில் இடம் பெற்றுள்ள செய்தியின் கருத்துக்கு ஒத்து இருப்பதால் இந்த செய்தி ஹசன் நல்லது என்ற நிலைக்கு வந்துவிடுகிறது.
எனவே பெற்றோர் விடும் சாபம் பிள்ளைகளிடத்தில் இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கு வந்தடையும்.

kadayanalluraqsha.com

பெரும்பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாத்திற்கு துணை போவதில்லை – விக்கிலீக் வெளியிட்டுள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதரின் கடிதம்

இந்தியாவின் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்துக்கு துணை போவதில்லை எனவும், அவர்கள் தேசியத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கத் தூதரகங்கள் தங்களது தலைமையிடத்துக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய அரசுமுறை ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் டேவிட் முல்ஃபோர்டு அனுப்பிய செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.

பிரிவினைவாதமும் மதத் தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களிடையே பரவலான ஆதரவைப் பெறவில்லை எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவும் டேவிட் முல்ஃபோர்டு அந்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, வலுவான ஜனநாயகம், பல்வேறு பண்பாடுகளையும் உள்ளடக்கிய தன்மை போன்றவை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம்கள் விரும்புவதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமூகத்துடன் கலந்துவிட விரும்புவதால், பயங்கரவாதத் செயல்களுக்கு ஆளெடுப்பது மிகமிகக் குறைந்துவிட்டதாகவும் அந்த ஆவணம் கூறுகிறது.

இந்தியாவின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவர் பதவியை முஸ்லிம் ஒருவர் வகித்தது, அரசியலில் ஈடுபடவும் பொருளாதார வெற்றி பெறவும் முஸ்லிம் சமூகத்துக்கு உந்துசக்தியாக அமைந்தது எனவும் முல்ஃபோர்டு குறிப்பிட்டுள்ளார்.

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில் அபினவ் பாரத் இந்து அமைப்பைச் சேர்ந்த தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் சர்மா ஆகியோர் மீது ஹைதராபாத் கோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந்த இருவரும் ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் மெக்கா மசூதியில், 2007ம் ஆண்டு மே 18ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடித்தது. மசூதி வளாகத்திற்குள் வெடித்த இந்த குண்டில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. வழக்கில் அபினவ் பாரத் என்ற வலதுசாரி இந்து தீவிரவாத அமைப்புக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அமைப்பின் சர்மா, குப்தா உள்ளிட்ட 6 பேர் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் சர்மா, குப்தா ஆஜ்மீர் வழக்கில் சிக்கி கைதாகியிருந்தனர். அவர்களை ஹைதராபாத்துக்குக் கொண்டு வந்து விசாரித்த சிபிஐ, பின்னர் இருவரையும் ஹைதராபாத் சிறையில் அடைத்தது. வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்தீப் சாங்கே, ராமச்சந்திர கல்சங்கரா என்கிற ராம்ஜி ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இன்னொரு குற்றவாளியான சுவாமி அஸ்னிமானந்த் சிபிஐயின் விசாரணை வளையத்தில் உள்ளார். இன்னொரு குற்றவாளியான சுனில் ஜோஷி என்பவர் 2007ம் ஆண்டிலேயே கொல்லப்பட்டு விட்டார்.

இந்த வழக்கில் நேற்று 14வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது சிபிஐ. 80 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில் அபினவ் பாரத் அமைப்புதான் இந்த செயலுக்குக் காரணம் என குற்றம்  சாட்டப்பட்டுள்ளது.

thatstamil

சுமத்ரா நிலநடுக்கமும் சுனாமி, பேரலைகளும் – ஓர் பார்வை

நாம் வாழும் உலகில் அவ்வப்போது புயல், மழை, வெள்ளம், பூகம்பம், எரிமலை வெடிப்புக்கள் என ஏதாவது ஒரு சோதனை நடந்து கொண்டேயிருக்கின்றது.

1923-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் இறந்தனர். 1935ல் இந்தியாவின் குவெட்டாவில் 50,000 பேரும், 1939ல் சிலியில்  28,000 பேரும், அதே ஆண்டு துருக்கியில் 33,000 பேரும், 1960ல் மொரோக்காவில் 12,000 பேரும், 1976ல் சீனாவில் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேரும், அதே ஆண்டு கவுதமாலாவில் 23,000 பேரும், 1978ல் ஈரானில் 25,000 பேரும், 1985ல் மெக்ஸிகோவில் 9,500 பேரும், 1988ல் ஆர்மீனியாவில் 25,000 பேரும், 1990ல் ஈரானில் 50,000 பேரும், 1993ல் இந்தியாவின் லட்டூரில் 10,000 பேரும், 1995ல் ஜப்பானில் 6,000 பேரும், 1998ல் ஆப்கானிஸ்தான் மற்றும் தாஜிஸ்தானில் 5,000 பேரும், 1999ல் துருக்கில் 17,000 பேரும், 2001ல் குஜராத்தில் 13,000 பேரும், 2003ல் ஈரானில் 41,000 பேரும் பூகம்பத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இவை பேரழிவு ஏற்படுத்திய பூகம்பங்களின் பட்டியல். இவை தவிர அவ்வப்போது சில ஆயிரக்கணக்கில் பலி கொண்ட பூகம்பங்களும் உண்டு.
இந்த நிலநடுக்கங்கள் எல்லாம் உலகை உலுக்கிக் குலுக்கியது. அப்போதெல்லாம் நாம் என்ன நினைத்துக் கொண்டிருந்தோம்? ஈரான் எங்கோ இருக்கின்றது என்று நினைத்து நாம் நம்முடைய பாவங்களில் மூழ்கிக் கொண்டிருந்தோம். அந்தப் பூகம்பத்திற்கும் நமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று எண்ணி வீண் விளையாட்டுக்களில், காமக் கூத்துக்களில், களியாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.

dubaitntj.blogspot.com