சோரபுதீன் என்கவுண்டர்: குஜராத் காவல்துறையினர் மீது பிடி இறுக்கின்றது

shorabdeen and kauser at Tajசோரபுதீன் சேக்‍ தங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதினால் தற்காப்பிற்காக தாங்கள் அவர்களை சுட்டு கொன்றதாக பசப்பி வந்த  குஜராத் காவல்துறையினரின் குட்டு நீதிமன்றத்தில் உடைந்துள்ளது.
நவம்பர் 26, 2005 அன்று குஜராத்தில் சோராபுதீன் மற்றும் அவரது மனைவி கவுஸர்பீவி ஆகியோர் என்கவுண்டர் என்ற மோதல் சாவில் கொல்லப்பட்டதாக குஜராத் காவல்துறையினர் அறிவித்தனர். இந்த சம்பவத்தை முதலில் குஜராத் சி.ஐ.டி. துறையும் பிறகு குஜராத் ஏ.டி.எஸ்.சும் விசாரித்தனர். பிறகு உச்சநீதிமன்ற தலையீடு காரணமாக மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ) இந்த வழக்கை விசாரித்து குஜராத் மாநில உயர் காவல்துறை ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்ஜாரா, ராஜ்குமார் பாண்டியன் மற்றும் திலீப் குமார் உட்பட 14 காவல்துறை அதிகாரிகளை கைதுச் செய்தது. இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Vanzara in custodyகைதுச் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி வன்ஜாரா

இந்த விசாரணையின் போது பல சாட்சிகள் சோராபுதீன் காவல்துறையை நோக்கி சுடவில்லை என்று குஜராத் காவல்துறையின் கட்டுக் கதையை அம்பலப்படுத்தி வருகின்றார்கள். இந்த வரிசையில் தடய அறிவியல் அலுவலர் ஒருவரும் தனது சாட்சியத்தில் காவல்துறையினரை நோக்கி சோராபுதீன் சுடவில்லை என்று சாட்சியம் அளித்துள்ளார்.
சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவரது ஆடைகள் மற்றும் கைகள் தொடர்பான தடயங்களை ஐ.பி.எஸ். அதிகாரி வன்ஜாரா காந்திநகரில் உள்ள தடய அறிவியல் நிறுவனத்திடம் ஒப்படைத்தார். இந்த தடயங்களை ஆய்வுச் செய்த பிறகு தடய அறிவியல் நிபுணர் எஸ்.பி. பட்ரிவாலா நீதிமன்றத்திற்கு அளித்துள்ளா அறிக்கையில் சோராபுதீன் கை தடயங்களில் நைட்ரேட்டோ அல்லது ஈயமோ இருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கியை ஒருவர் பயன்படுத்தும் போது அவரது கைகளில் நைட்ரேட் அல்லது ஈயத்தின் தடயங்கள் நிச்சயமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள் என்றும் ஆனால் சோராபுதீன் கைககளில் இந்த உலோகங்களின் தடயங்கள் இல்லாதது அவர் மோதலின் போது காவல்துறையை நோக்கி சுட்டார் என்ற வாதம் தவிடுபொடியாகிவிட்டது என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கின்றது.
சோராபுதீன் உடலில் உள்ள குண்டு காயங்கள் அவர் சம்பவம் நடைபெற்ற போது அணிந்திருந்த சட்டையில் உள்ள துளைகளுடன் ஒப்பிடவில்லை என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு தடய அறிவியல் நிறுவனத்தின் ஆவணம் தெரிவிக்கின்றது.உடலில் உள்ள காயங்களுடன் சட்டடையில் உள்ள ஒட்டைகள் ஒத்துப் போக வேண்டும். ஆனால் சோரபுதீன் சம்பவத்தில் அவ்வாறு அமையவில்லை.
அஹ்மதாபாத்திற்கு வெளியில் இரு சக்கர வாகனத்தில் வந்த சோரபுதீனை தாங்கள் வழிமறித்த போது சறுக்கி அவர் விழுந்ததாக குஜராத் ஏ.டி.எஸ்.காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறினர். ஆனால் தடய அறிவியல் துறை நிறுவனத்தின் அறிக்கையில் நின்று கொண்டிருந்த நிலையில் அவர் சுடப்பட்டதாக தெரிவிக்கின்றது.  ஏ.டி.எஸ். தரப்பு அறிக்கை உண்மை எனில் சோராபுதீனின் உடலில் சிராய்ப்புகள் இருந்திருக்கும் என்றும் ஆனால் அப்படி எதுவும் அவரது உடலில் இல்லை என்றும் தடய அறிவியல் துறையின் அறிக்கை தெரிவிக்கின்றது. சோராபுதீன் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை தடய அறிவியல் துறை ஆய்வுச் செய்த போது அதில் சாதாரண உரசல்கள் தான் இருந்ததாக அத்துறை கூறுகின்றது.
அப்பாவி சோரபுதீனை சுட்டுக் கொன்ற வன்ஜாரா தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் மீது பிடி இறுக்கி வருகின்றது. நியாயம் பிறக்கட்டும். நீதி மலரட்டும்

tmmk

துண்டிக்கப்பட்ட உடல் உறுப்பை மீண்டும் வளர வைக்கும் ஜீன்: விஞ்ஞானிகள் ஆய்வு!

விபத்தில் சிக்கி கை, கால் துண்டிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் துன்பம் கொடுமையானது. இதுபோல் விபத்துகளில் சிக்கி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடந்துவருகின்றன இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் அஜீஸ் அபூபக்கர் தலைமையிலான குழுவினர் இதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.

பல்லியின் வால் துண்டிக்கப்பட்டாலும் அது கொஞ்ச நாளில் மீண்டும் வளர்ந்துவிடும். அதுபோல சில உயிரினங்களின் உடல் உறுப்பு துண்டிக்கப்பட்டாலும் அது மீண்டும் வளர்ந்துவிடும். இதுபோலவே பிளானேரியன் எனப்படும் புழுவின் தலை துண்டிக்கப்பட்டாலும் அது இறந்துவிடுவதில்லை. கொஞ்ச நாளில் அதன் தலை வளர்ந்துவிடும். தலை மட்டுமின்றி அந்த புழுவின் மூளை சேதம் அடைந்தாலும் அது மீண்டும் வளர்ந்துவிடும்.

இப்படி வித்தியாசமான உடல் அமைப்பு கொண்ட இந்த புழுவை அடிப்படையாக வைத்து டாக்டர் அஜீஸ் தலைமையிலான குழு ஆய்வுகளை நடத்தியது. பிளானேரியன் புழுவின் உடலில் ஏற்படும் இந்த மாற்றத்துக்கு காரணமான ஜீன் எது என்பதை முதலில் கண்டுபிடித்தனர். “ஸ்மெட் பெர்ப்“ எனப்படும் இந்த ஜீன் தான் துண்டிக்கப்பட்ட தலை, சேதம் அடைந்த முளை ஆகியவற்றையும் மீண்டும் வளர வைக்கிறது என்பதை கண்டுபிடித்தனர்.

தற்போது இது குறித்து அடுத்தகட்ட ஆய்வுகள் நடக்கிறது. இதே ஜீன் மனித உடலில் உள்ளதா? அல்லது அதுபோன்ற ஜீன் மனித உடலில் செலுத்தப்படும் போது புழுவின் உடலில் நடந்தது போல துண்டிக்கப்பட்ட உடல்உறுப்புகள் தானாகவே வளருமா? என்பது தான் அடுத்தகட்ட ஆய்வுகள் ஆகும்.

இந்த ஆய்வுகள் வெற்றி பெறும் போது உடல்ஊனமுற்றவர்கள் மறுவாழ்வு பெற முடியும். விபத்தில் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் இழந்த உடல் உறுப்புகளை சில மாதங்களில் பெறமுடியும்.

தேடிததந்தவர்-அபு அஹ்சன்

tntj.net

சாதிக்க அரசுப் பள்ளியும் ஒரு தடையல்ல!ஜாஸ்மீன்


மே 26  அன்று வெளியான எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக சாதனை புரிந்த ஜாஸ்மினைப் பார்த்து பலரது புருவமும் சற்றே உயர்ந்தன. காரணம் அவர் படித்த பள்ளி. திருநெல்வேலி மாவட்டம் டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்த ஜாஸ்மின் மாநில அளவில் முதலிடம் பெற்று தனது பள்ளிக்கும், பள்ளியின் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

தமிழக மக்கள் மனதில் இன்று வரை பதிந்து விட்ட ஒரு செய்தி. மாநில அளவிலோ,மாவட்ட அளவிலோ  சாதிக்க வேண்டுமானால் புகழ்பெற்ற தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்தாலே அது முடியும் என்பது. அதை மாற்றி புதிய சரித்திரம் படைத்துள்ளார் தெரு தெருவாக ஜவுளி வியாபாரம்  செய்து பிழைப்பு நடத்தும் சேக் தாவூதின் மகள்  ஜாஸ்மின்.

தனியார் பள்ளிகள் அடிக்கும் கொள்ளைக் கட்டணத்தில் தன் பிள்ளைகளை சேர்த்தால் மட்டுமே கல்வி தரமானதாக இருக்கும் என்று என்னும் பெற்றோர்கள் இனியாவது அரசுப் பள்ளி ஆசிரியர்களின்  முயற்சிகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அது போல அரசும் கல்வியில் தனிக் கவனம் செலுத்தி அரசுப் பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து தமிழக மக்கள் அரசுப் பள்ளிகளில் முண்டியடித்து தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.

-இறை நேசன்-

விடுதி வசதி : முஸ்லிம் மாணவியர் சேர்க்கை ஆரம்பம்

வேலூர் வாணியம்பாடி, திருச்சி வைகுண்டகோஷ்புரம், திண்டுக்கல் பேகம்பூர், கோவை சிட்கோ, சுந்தரபுரம் மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அரசு முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதியை இயக்கி வருகிறது

Image

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முஸ்லிம் மாணவியர் இடைவிடாது கல்வி பயிலும் நோக்கில் சிறுபான்மையினர் நலத்துறை வேலூர் வாணியம்பாடி, திருச்சி வைகுண்டகோஷ்புரம், திண்டுக்கல் பேகம்பூர், கோவை சிட்கோ, சுந்தரபுரம் மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அரசு முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதியை இயக்கி வருகிறது. இந்த கல்வியாண்டில் இவ்விடுதிகளில் மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
விடுதியில் 4ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படிக்கும் மாணவியர் சேர்க்கப்படுவர். மாணவியர் முஸ்லிம் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.  மாணவியின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். இலவச உணவு மற்றும் உறைவிடம், அனைத்து அடிப்படை வசதிகள் அளிக்கப்படும். மேலும் 4ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு இரண்டு செட் இலவச சீருடை வழங்கப்படும்.  பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவியருக்கு இலவச சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். தொலைதூரத்திலிருந்து வந்து கல்வி பயில்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 முதல் மாலை 5:45 மணி வரை, அனைத்து மாவட்ட கலெக் டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந் தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அல்லது சம்பந் தப்பட்ட விடுதி காப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி விடுதிக்கு, ஜூன் 10ம் தேதி மாலை 5:45 மணிக்குள்ளும், கல்லூரி விடுதிக்கு ஜூன் 24ம் தேதி மாலை 5:45 மணிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது

adhikaalai


டயர் வெடித்தது ஸ்பைஸ் ஜெட் விமானம்

டெல்லி: டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்ற ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானத்தில் டயர் வெடித்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் டெல்லிக்கு திருப்பி அழைக்கப்பட்டு, தரையிறக்கப்பட்டது.

அகமதாபாத்தில் இருந்து டெல்லி வழியாக இந்த விமானம் ஸ்ரீநகர் சென்றது. டெல்லி விமான நிலையத்திலிருந்து பகல் 2 மணிக்கு விமானம் புறப்பட்டது. போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த விமானத்தில் 186 பயணிகள் இருந்தனர்.

அந்த விமானம் சென்ற சில நிமிடங்களில், தரையிறங்கிய இன்னொரு விமானத்தின் விமானிகள் ஓடு தளத்தில் டயர் துண்டுகள் சிதறி கிடப்பதைப் பார்த்து உடனடியாக தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அது ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் துண்டுகளாகத் தான் இருக்க வேண்டும் என்று கருதிய தரைக்கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் உடனே அந்த விமானத்தை டெல்லிக்கு திருப்புமாறு உத்தரவிட்டனர்.

அதற்குள் 15 நிமிடங்கள் ஓடிவிட்டன. இந்த நேரத்துக்குள் அந்த விமானம் 150 கி.மீ. தூரம் வரை பயணித்துவிட்டது. ஆனாலும், அந்த விமானம் உடனடியாக டெல்லிக்கு திருப்பப்பட்டது.

அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த விமானம் டெல்லிக்கு திரும்பி வந்தது.

விமானத்தை குறைந்த உயரத்தில் பறக்க வைத்து தொலைநோக்கிகள் மூலம் பார்த்தபோது அதன் வலது பக்க டயர்களில் ஒன்று வெடித்துள்ளது உறுதியானது.

இதையடுத்து விமானத்தை அதற்கேற்றார் போல தரையிறங்குமாறு (smooth sail landing) விமானிகளுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் டயர் மாற்றப்பட்ட அந்த விமானம் ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றது.

-nesan-

விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்?

திருவனந்தபுரம்: மங்களூர் விமான விபத்தில் பலியானவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் அவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மங்களூர் விமான விபத்தில் பலியான 158 பேரில் 22 பேரின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகி விட்டன. அவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனைகள் ஒருபுறம் நடக்கின்றன. அத்தோடு பயணிகள் பட்டியலையும், பாஸ்போர்ட்டில் உள்ள பெயர் விபரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பணியும் நடந்து வருகிறது.

இது தொடர்பாக கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரத்தில் உள்ள பஸ்போ்ர்ட் அலுவலக்களின் உதவியை அதிகாரிகள் நாடியுள்ளனர். அதில திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் பலியான எட்டு பேருக்கு தங்கள் அலுவலகத்தில் இருந்து பாஸ்போர்ட் வழங்கவில்லை என்று கோழிக்கோடு, மலப்புரம் பாஸ்போர்ட் அலுவலகங்கள் தெரிவித்துள்ளன.

எனவே இவர்கள் போலி பாஸ்போர்ட்டில் வந்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் தங்களுடைய பாஸ்போர்டுகளை தங்கள் வேலை செய்யும் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விடவேண்டும். நாடு திரும்பும்போது மட்டும் அதை பெற்று கொள்ள முடியும்.

ஆனால் பல நிறுவனங்கள் அதைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதுண்டு. இதனால் இவர்களைப் போன்றவர்களுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுப்பதற்காகவே வளைகுடா நாடுகளில் பல மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.

நிறுவனங்களிடம் இருந்து பாஸ்போர்ட் முடியாதவர்கள் எப்படியாவது நாடு திரும்ப வேண்டும், என்பதற்காக பணம் கொடுத்து போலி பாஸ்போர்ட் பயணம் செய்கின்றனர். இப்படிதான் விபத்தில் சிக்கிய மங்களூர் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்நேரம்.காம்

மங்களூர் விபத்து: கறுப்பு பெட்டி கிடைத்தது

mangalore air india accident, Air India on Mangalore  air crash,  Mangalore: Air India aircraft overshoots runway, Air India Crash in  Mangalore Kills 163 People

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.துபாயில் இருந்து 166 பயணிகளுடன் வந்த மங்களூரில் தரை இறங்கும்போது வெடித்து தீப்பிடித்ததில் 158 பேர் உடல் கருகி இறந்தனர்.
விபத்து நடந்தது எப்படி என்பது பற்றி கண்டுபிடிப்பதற்காக இந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டனர்.விமானத்தின் முன் பகுதி சிதைந்து கிடந்த இடத்தில் கறுப்பு பெட்டி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்ய மும்பை அல்லது டெல்லிக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
மங்களூர் விபத்து: அமெரிக்க குழு விசாரணை:
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மங்களூரில் விபத்துக்குள்ளான விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏதும் இருந்தா என்பதை கண்டறிய ஏர் இந்தியா மற்றும் போயிங் நிறுவனங்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் மங்களூர் விமான விபத்து குறித்து விசாரணை நடத்த அமெரிக்காவில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கழகத்தின் நிபுணர்கள் இந்தியா வர உள்ளனர். அவர்கள் வருகிற செவ்வாய்க்கிழமை மங்களூர் வருகிறார்கள்.
விபத்து குறித்து இந்திய நிபுணர்களுடன் சேர்ந்து ஆய்வு செய்வார்கள். அவர்கள் ஆய்வு நடத்திய பிறகு விபத்துக்கான முழு காரணம் தெரிய வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மங்களூரில் நெஞ்சை உருக்கும் சோகம் விமான விபத்தில் 159 பேர் பலி :
மங்களூர்: மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை நெஞ்சை உருக்கும்  மிகக் கோரமான விமான விபத்து ஏற்பட் டது. துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரை இறங்கும்போது ஓடுபாதையை தாண்டி மலையில் மோதி  வெடித்துச் சிதறியது. இதில், 19 குழந்தைகள் உட்பட 159 பேர் கருகி பலியாகினர். அதிர்ஷ்டவசமாக 7 பேர் உயிர் தப்பினர். இந்தியாவில் 10  ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மிக கோரமான விமான விபத்து இது.

மேலும் படிக்க…

மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 159 பேர் பலி

Tamil news paper, Tamil daily news  paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political  news, business news, financial news, sports news, today news, India  news, world news, daily news update

மங்களூர், மே.22: துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 159 பேர் பலியானார்கள்.

துபாயில் இருந்து இன்று காலை 166 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் மங்களூர் விமான நிலைத்துக்கு வந்தது. விமான நிலையத்தின் ஓடு தளத்தில் தரையிறங்க முற்பட்ட போது தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 159 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. விமானத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.  விமானத்தில் பயணம் செய்தவர்களின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

விமான ஊழியர்கள் 6 பேர் மற்றும் 4 குழந்தைகள் உட்பட 166 பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

விபத்திற்குள்ளான விமானம் போயிங் 737 ரகத்தைச் சேர்ந்தது. இந்த விமானத்தின் பைலட் ரஷ்யாவைச் சேர்ந்தவர்.

மத்திய அமைச்சர்கள் பிரபுல் பட்டேல், வீரப்ப மொய்லி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு  விரைந்துள்ளனர்.

ஏர்-இந்தியா தகவல் உதவிப் பிரிவுக்கான தொலைபேசி எண்கள்:

மங்களூர்: 0824-2451046, 2451047

பெங்களூர்: 080-66785172, 080-22273310

மும்பை: 022-22796161

துபை: 00971-2165828, 2165829

அல்குர்ஆன் கூறும் சூராவளி எச்சரிக்கைகள்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை

உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)

இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!

சூராவளி என்பது என்ன

சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். மேலும் படிக்க…

பாலஸ்தீன சிறுவர்களின் நிலை…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக…ஆமின்.

சமீபத்தில் பாலஸ்தீன சிறுவர்களின் நிலை குறித்த ஒரு கட்டுரையை “உன்னதம்” இதழுக்காக மொழிப்பெயர்க்கும் வாய்ப்பு கிட்டியது. அல்ஹம்துலில்லாஹ். மனதில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய அந்த கட்டுரை உங்கள் முன் இங்கு பதியப்படுகிறது…

சர்வதேச சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்பு (Defense for Children International – Palestine Section) – பாலஸ்தீன கிளை, ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பதை தன் குறிக்கோளாக கொண்ட அமைப்பு.

ரிபத் கஸ்சிஸ் (Rifat Kassis) இதனுடைய தலைவராக 2005 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தற்போது இரண்டாவது முறையாக பதவியில் உள்ளார். சமீபத்தில் “The Electronic Intifada” என்னும் இணையப்பத்திரிக்கையை சேர்ந்த அட்ரி நிவ்ஹோப் (Adri nieuwhof) இவரிடம் நேர்க்காணல் நடத்தினார். அப்போது ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ள சிறுவர்களின் நிலை குறித்து ரிபத் கஸ்சிஸ் விளக்கினார்.

அட்ரி நிவ்ஹோப்: உங்கள் அமைப்பை பற்றியும், நீங்கள் இங்கு செய்யக் கூடிய பணி பற்றியும் விளக்கவும்.

ரிபத் கஸ்சிஸ்: எங்கள் அமைப்பு பணியாற்ற தொடங்கி இது பத்தொன்பதாம் வருடம். இதை நான் மற்றவர்களுடன் சேர்ந்து தொடங்கினேன். சின்னதாக எளிமையாக தொடங்கப்பட்ட இந்த அமைப்பை இப்போது பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. இங்குள்ள சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதும், குறிப்பெடுத்துக் கொள்வதும், அந்த சிறுவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் தான் எங்களின் முதன்மையான பணி.
அதுமட்டுமல்லாமல் உள்நாட்டு கலவரங்களில் சிறுவர்கள் பாதிக்கப்படாமல் காப்பதும் எங்கள் பொறுப்பு. உதாரணத்துக்கு இங்குள்ள (பாலஸ்தீனம்) கல்வி அமைச்சகத்துடன் இணைந்து, சிறுவர்கள் உடல் ரீதியாக தண்டிக்க படுவதையும், மற்ற சமூக தொண்டு நிருவனங்களுடன் சேர்ந்து சிறுவர்களின் உரிமைகளை காப்பதும், அவர்களை பணிகளில் சேர்ப்பது பற்றியும், சிறுவர்கள் தங்களுக்கான உரிமைகளை தெரிந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அழைப்பு விடும்படியும், அதன்மூலம் உள்நாட்டு கலவரங்களையும், சிறுவர்கள் உடல் ரீதியாக தண்டிக்கப்படுவதையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் எண்ணுகிறோம்.
அ: இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன சிறுவர்கள் மீதான முக்கிய குற்றச்சாட்டு என்ன?
ரி: எங்களிடம் உள்ள தகவலின் படி ஒவ்வொரு வருடமும் சுமார் 700 சிறுவர்கள் இஸ்ரேலிய நீதிமன்றங்களால் குற்றஞ்சாட்டபட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், அதாவது சுமார் 26%, இஸ்ரேலிய ராணுவத்தின் மீது கல்லெறிந்ததால் பிடிக்கப்பட்டவர்கள்.
மற்ற காரணங்கள், தடை செய்யப்பட்ட அரசியல் பணிகளில், ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றது போன்றவை. இப்படி சிறையில் உள்ள சிறுவர்களில் பனிரெண்டு வயது சிறுவர்கள் கூட உண்டு.
அ: இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன சிறுவர்களின் அனுபவங்கள் குறித்து கூற முடியுமா?
ரி: நாங்கள் இந்த சிறுவர்களிடமிருந்தும், அவர்களது பெற்றோர்களிடமிருந்தும், அவர்களது வழக்கறிஞர்களிடமிருந்தும், ஒரே விதமான தகவல்களையே பெறுகிறோம். அதாவது இஸ்ரேலிய வீரர்கள் இரவிலோ, விடியற்காலையிலோ, சிறுவர்களின் வீட்டிற்கு வருவார்கள். பெரும் இரைச்சல் போட்டுக்கொண்டு காட்டமான முறையில் வீட்டிற்குள் நுழைவார்கள். அந்த சிறுவர்களின் பெற்றோர்களிடம் எந்த ஒரு காரணமும் கூறாமல் சிறுவர்களை அழைத்து சென்று விடுவார்கள். சில சிறுவர்கள் சோதனைச் சாவடிகளில் வைத்து கைது செய்யப்படுவதும் உண்டு.
சிறுவர்கள் அவர்களது வீட்டிலிருந்து அழைத்து செல்லப்படும்போது அந்த வீரர்கள் கத்துவார்கள், “இங்கே யார் முஹம்மது”. அந்த முஹம்மது என்ற சிறுவனுக்கு 12-13 வயது இருந்தாலும் சரி, கண்டுக்கொள்ளமாட்டர்கள். அவனை உதைப்பார்கள், கண்ணை கட்டுவார்கள், அவன் கைகளை பிளாஸ்டிக் கயிறுகளால் அவன் வலியுனால் துடிக்குமளவு கட்டுவார்கள். பின்னர் அவர்களது வாகனத்திற்கு பின்னால் அவனை போட்டுக்கொண்டு சென்று விடுவார்கள். வாகனத்தில் வைத்தும் அடிப்பார்கள். இது அந்த சிறுவர்களுக்கு உளவியல் ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தும்.
அந்த சிறுவர்கள் கொண்டு செல்லப்பட்ட இடத்தில், ஒன்று சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது கேள்வி கேட்க அழைத்து செல்லப்படுவார்கள். கேள்வி கேட்கப்படும்போதும் அவர்கள் உதைக்கப்படுவார்கள், அடிக்கப்படுவார்கள், தவறான வார்த்தைகளால் திட்டப்படுவார்கள். அவர்களது குடும்பங்களை அழித்து விடுவோம் என்றும், அவர்களுடைய தாய்மார்கள் கற்பழிக்கப்படுவார்கள் என்றும் மிரட்டப்படுவார்கள்.மேலும் படிக்க…