பாபர் மசூதி தீர்ப்பு: கட்டப் பஞ்சாயத்து – இந்தியாவின் முன்னணி சட்ட நிபுணர்கள் கருத்து

உலகமெங்கும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மஸ்ஜித் வழக்கில் இன்று மாலை 5 மணி அளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

அந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்றும், அந்த இடத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதியை கோயிலுக்கும், இன்னொரு பகுதியை பள்ளிவாசலுக்கும், மற்றொரு பகுதியை நிர்மோகி அகோரா விற்கும் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. இந்த தீர்ப்பை விசுவ ஹிந்து பரிசத் வரவேற்றுள்ளது.

இத்தீர்ப்பு பலருக்கும் திகிலூட்டுவதாக பிரபல சட்ட நிபுணர் ராஜீவ் தவான் என்.டி.டி.வி தொலைக்காட்சி பேட்டிக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு என்றும் வர்ணித்துள்ளார். இதையே மற்றுமொரு சட்ட நிபுணரான பி.பி. ராவும் வழிமொழிந்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் இது குறித்து யாருக்கும் வெற்றியும்  இல்லை, தோல்வியும் இல்லை என்று கூறியுள்ளது.

சுதீர் குமார் அகர்வால் மற்றும் தர்ம் வீர் சர்மா ஆகிய நீதிபதிகள் ஒரு மாதிரியாகவும் சிபகத்துல்லா கான் வேறு மாதிரியாகவும் தீர்ப்பினை கொடுத்துள்ளனர்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர்கள் தீர்ப்பு குறித்து டெல்லியில் விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதைய சூழலில் இத்தீர்ப்பை ஏற்றாலும், விரைவில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முஸ்லிம்கள்  தரப்பில் கூறப்படுகின்றது.

பாபர் மசூதி தீர்ப்பு – அமைதி காப்போம்!

61 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், “பாபர் மசூதியின் கீழ் கோயில் இருந்ததா? மற்றும் பாபர் மசூதி நிலம் யாருக்குச் சொந்தம்?” ஆகிய இரு விஷயங்களின் மீது நாளை 30.09.2010 மாலை 3.30 மணிக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

கடந்த 24.09.2010 அன்று வழங்கப்படுவதாக இருந்த தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தடையுத்தரவு கோரிய வழக்கின் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. அவ்வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது.

450 ஆண்டுகால பழமைவாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல கலவரங்கள், ஏராளமான அப்பாவி மனித உயிர்கள் என பல கோர சம்பவங்கள் கடந்த 61 ஆண்டுகளில் நாட்டில் நடைபெற்றுள்ளது.

நாளையத் தீர்ப்பு எந்தத் தரப்புக்குச் சாதகமாக வந்தாலும் நாட்டில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கலாம் என அஞ்சும் அரசுகள், பதட்டம் நிறைந்த பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு, விடுமுறை போன்றவைகளை அறிவித்து பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.

தீர்ப்பு எப்படி அமைந்தாலும் அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். இந்திய நாட்டு அரசியலமைப்புச் சட்டப்படி, உயர் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் இறுதியானவை அல்ல. ஒரு வழக்கில் உயர் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்குச் செல்ல முடியும். ஆகவே, நாளை வழங்கப்படும் தீர்ப்பு எத்தகையதாக இருந்தாலும் இரு தரப்பாரும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்க வேண்டும்.

வன்முறை நெருப்பைத் தூண்டிவிட்டு தங்கள் ஆதாயங்களுக்காக குளிர்காய நினைக்கும் குறுமதியாளர்களின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகி விடக்கூடாது. அயோத்’தீ’யை எரிய விடாமல் அனைவரையும் மதித்து, அரவணைத்து செல்லும் பொறுப்பை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது கடமையென செய்ய வேண்டும். வதந்திகளையோ, வன்முறை செய்திகளையோ பரப்பாமல் இருக்க வேண்டும். பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

பாபர் மசூதி நிலத்தின் மீதான தீர்ப்பின் முக்கியத்துவம் கருதி ஊடகங்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆவேசமான கருத்துக்கள், தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். “பரபரப்புக்காக” இந்தத் தீர்ப்பை யாரும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. நாளை மற்றொரு நாளாக இருக்க வேண்டுமே தவிர, வரலாற்றில் கறைபடியும் வகையில் மற்றொரு கறுப்பு நாளாக மாறி விடாமல் இருக்க இந்திய நாட்டின் இறையாண்மையைப் பேணி பாதுகாக்கும் வகையில் அனைவரும் அமைதி காப்போம்.

Inneram.com

Nallur Peer

இரட்டைகோபுரதாக்குதலை நடத்தியது அமெரிக்கா தான் – ஐநா சபையில் ஈரான் அதிபர் பகிரங்க குற்றச்சாட்டு!

President Mahmoud Ahmadinejad
நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதிநிஜாத். அவரது பேச்சைக் கண்டித்து அமெரிக்க குழுவினர் ஐ.நா.விலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய அவர், 2001ம் ஆண்டு அமெரிக்காவின் மாபெரும் உளவுப் பிரிவையும், பாதுகாப்பு வளையத்தை எல்லாம் மீறி நியூயார்க்கில் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலை அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்தியதாகக் கூறுகின்றனர்.

ஆனால், அந்தத் தாக்குதலை நடத்தியதே அமெரிக்கா தான் என்று தான் உலகின் பெரும்பாலான மக்கள் நினைக்கி்ன்றனர். உலகளவில் சரிந்து வரும் தனது செல்வாக்கை நிலை நிறுத்தவும், சரிந்து விட்ட தனது பொருளாதாரத்தை சரி செய்யவும், வளைகுடாவில் தனது ஆதிக்கத்தை மீ்ண்டும் நிலைநாட்டி, இஸ்ரேலுக்கும் யூத சக்திகளுக்கும் உதவவும் அந்தத் தாக்குதலை திட்டமிட்டு அமெரிக்கா தான் நடத்தியது.

அமெரிக்க அரசில் உள்ள ஒரு சக்தி வாய்ந்த பிரிவினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று தான் பெரும்பாலான அமெரிக்க மக்களும், உலகின் பெரும்பாலான மக்களும், உலக அரசியல் தலைவர்களும் நினைக்கின்றனர் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

அல்லது அந்தத் தாக்குதலை உண்மையிலேயே தீவிரவாதிகள் தான் நடத்தினர். ஆனால், அந்தத் தாக்குதலை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா என்றும் சொல்லலாம்.

இந்த நியூயார்க் தாக்குதலை முன் வைத்துத் தான், தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஆப்கானிஸ்தான் மீதும் இராக் மீதும் அமெரிக்கா போர் தொடுத்தது.

தான் மட்டும் அணு ஆயுதங்களை குவித்து வைத்துக் கொண்டு, நாங்கள் (ஈரான்) அணு ஆயுதம் தயாரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எங்களையும் அமெரிக்கா வம்புக்கு இழுத்து வருகிறது என்றார்.

அகமதிநிஜாத் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே அமெரிக்க ஐ.நா. குழுவினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளின் தூதர்களும் குழுவினரும் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து பேசிய அகமதிநிஜாத், இதனால் நியூயார்க் தாக்குதல் குறித்து ஐ.நா. முழுமையான விசாரணை நடத்தி உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

அணு ஆராய்ச்சி விஷயத்தில் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். ஆனால், அது நேர்மையாகவும் மரியாதையுடனும் நடக்க வேண்டும்.

அடுத்த நாட்டுக்கு மரியாதை தராமல் செயல்பட்டால் பதிலுக்கு மரியாதை கிடைக்காது என்பதை அனைவரும் உணர வேண்டும். அதே போல ஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து நமது வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நினைத்தால் அதன் மீது கொஞ்ச நஞ்சம் உள்ள நம்பிக்கையும் போய்விடும்.

சர்வதேச அணு ஆராய்ச்சி மையத்தின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டே ஈரானிய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. மற்றபடி யாருடைய நெருக்குதலுக்கும் ஈரான் பணிந்ததில்லை, இனியும் பணியாது என்றார்.

thatstamil

அயோத்தி விவகாரம்-60 ஆண்டு கால மத-சட்டப் போராட்டம் கடந்து வந்த பாதை..

modi

டெல்லி: கடந்த 60 ஆண்டு காலமாக நாட்டு மக்களை அலைக்கழித்து வரும் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகப் போகிறது. இதற்கான தடைகளை உச்சநீதிமன்றம்  அகற்றி விட்டது. கடந்த 60 ஆண்டு காலமாக நடந்துவரும் சட்டப் போராட்டம் குறித்த ஒரு பார்வை.60 ஆண்டு கால சட்டப் போராட்டமாக இது இருந்தாலும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலான மோதலாக இது நிலவி வருகிறது.

முதல் முறையாக 1949ம் ஆண்டு இந்த பிரச்சினை (அதாவது சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததா, அந்த இடம் யாருக்குச் சொந்தம், கோவிலை இடித்து விட்டுத்தான் மசூதி கட்டப்பட்டதா என்பது) கோர்ட்டுக்கு வந்தது. அந்த ஆண்டில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர், சீதையின் சிலைகள் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டது.

பாபர் மசூதி இந்த இடத்தில் கிட்டத்தட்ட 400 ஆண்டுளாக இருந்து வருகிறது என்பது ஒரு சாராரின் வாதம். இன்னொரு சாராரோ, அங்கு இருந்த மிகப் பெரிய கோவிலை இடித்து விட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டதாக கூறுகின்றனர். இந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார். அதையொட்டிதான் அங்கு கோவில் கட்டப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றனர் அவர்கள்.

அயோத்திப் பிரச்சினையின் முக்கிய அம்சங்கள்-ஆரம்பத்திலிருந்து….

1528– அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது.

1853– சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமை கொண்டாடி முதல் முறையாக மிகப் பெரிய மதக் கலவரம் வெடித்தது. பலர் உயிரிழந்தனர்.

1859– ஆங்கிலேய அரசாங்கம் சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றி வேலி அமைத்தது. மேலும், இந்துக்களும், முஸ்லீம்களும் தனித் தனியாக வழிபாடு நடத்த ஏற்பாடு செய்தது. இதுதான் கடந்த 90 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

1949– டிசம்பர் மாதத்தில் ராமர், சீதையின் சிலைகள் மசூதியில் வைக்கப்பட்டன. இதனால் கலவரம் வெடித்தது. வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து சர்ச்சைக்குரிய இடத்தில் யாரும் நுழையக் கூடாது என்று அரசு தடை விதித்தது. அதை சர்ச்சைக்குரிய பகுதியாகவும் அரசு முதல் முறையாக அறிவித்தது.

1984– ராமர் கோவில் கட்டும் கோரிக்கையும், இயக்கமும் வலுப்பெற்றன. இந்து அமைப்புகள் இணைந்து ஒரு கமிட்டியை அமைத்தன. அத்வானி தலைவராக நியமிக்கப்பட்டார்.

1986- மசூதி அமைந்துள்ள பகுதியை இந்துக்கள் வழிபாடு நடத்த திறந்து விட வேண்டும் என மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

1986– பாபர் மசூதி நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டது.

1989- சர்ச்சைக்குரிய இடத்திற்கு அருகே ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் நடத்தின.

1990– அப்போதைய பாஜக தலைவரான அத்வானி நாடு முழுவதும் ரத யாத்திரையை மேற்கொண்டார். இந்த சமயத்தில் விஎச்பி தொண்டர்கள் மசூதிக்குள் புகுந்து அதன் ஒரு பகுதியை சேதப்படுத்தினர். பிரதமராக இருந்த சந்திரசேகர் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சித்தார். ஆனால் பலன் இல்லை.

1991– ராமர் கோவில் கட்டும் இயக்கம் என்ற பெயரில் அத்வானி நடத்திய ரத யாத்திரையால் பாஜக அரசியல் ரீதியாக பலமடைந்தது. உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது. நாடாளுமன்றத்தில் முதல் முறையாக முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

– அயோத்தியில் கரசேவகர்கள் குவியத் தொடங்கினர். நாடு முழுவதிலுமிருந்து செங்கற்கள் கொண்டு வரப்பட்டன.

1992– டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதியை இடிததனர் கரசேவகர்கள். நாடு முழுவதும் மதக் கலவரம் வெடித்தது. ஏராளமான அப்பாவி இந்து, முஸ்லீம்கள் உயிரிழந்தனர்.

– டிசம்பர் 16ம் தேதி நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு [^]

1993– நியமிக்கப்பட்டு 3 மாதங்கள் கழிந்த நிலையில் லிபரான் கமிஷன் தனது விசாரணையைத் தொடங்கியது.

2001– பிப்ரவரி 27ம் தேதி குஜராத்தின் கோத்ராவில் ரயிலுக்கு வைக்கப்பட்ட தீயில் சிக்கி 58 பேர் கொல்லப்பட்டனர். அனைவரும் அயோத்தியிலிருந்து வந்து கொண்டிருந்த இந்து அமைப்பினர் ஆவர். இதையடுத்து குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. 1000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

2002– ஏப்ரல் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னெள பெஞ்ச்சில் 3 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச், தீர்ப்பு தொடர்பான இறுதி விசாரணையைத் தொடங்கியது.

2003– ராமர் கோவில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்ததா என்பதை அறிய தொல்பொருள் ஆய்வுக்கு லக்னோ பெஞ்ச் உத்தரவிட்டது.

– செப்டம்பரில் பாபர் மசூதியை இடித்த செயலுக்குத் துணை போன இந்து மதத் தலைவர்கள், விசாரணைக்கு உட்பட வேண்டும் என லக்னெள பெஞ்ச் உத்தரவிட்டது. இருப்பினும் அத்வானி மீது எந்தப் புகாரும் கூறப்படவில்லை.

2007– அயோத்தி வழக்கில் மறு ஆய்வு மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

2009– லிபரான் கமிஷன் தனது 17 ஆண்டு கால விசாரணையை முடித்து ஜூன் 30ம் தேதி அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் முழு விவரங்கள் பொதுமக்களுக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

2010– செப்டம்பர் 24ம் தேதி அயோத்தி வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என லக்னெள பெஞ்ச் அறிவித்தது.

– செப்டம்பர் 23ம் தேதி அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

– செப்டம்பர் 28ம் தேதி இந்தத் தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்.

– செப்டம்பர் 30ம் தேதி அலகபாத் உயர் நீதிமன்றத்தி் லக்னெள பெஞ்ச் தனது தீர்ப்பை வெளியிடவுள்ளது.

thatstamil