எஸ்ஐடி முன்பு நரபலி மோடி ஆஜர்: 3 மணி நேரம் விசாரணை- ராகவன் வரவில்லை

modi

டெல்லி: குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது, முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈஷான் ஜாப்ரி உள்பட 60க்கும் மேற்பட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைக்கு இன்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி [^] ஆஜரானார். ஆனால் விசாரணைக் குழுத் தலைவர் ஆர்.கே.ராகவன் அப்போது இல்லை.

2002ம் ஆண்டு நடந்த குஜராத் மதக் கலவரத்தின்போது குல்பர்க் சொசைட்டியில் ஜாப்ரி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டனர். மேலும் படிக்க…

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானிக்கு எதிராக சாட்சியம்!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக தலைவர் அத்வானிக்கு எதிராக, அவரது பாதுகாப்பு முன்னாள் அதிகாரி அஞ்சு குப்தா சாட்சியம் அளித்தார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு உத்திரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக, அத்வானியின் பாதுகாப்பு முன்னாள் அதிகாரி அஞ்சு குப்தா ஐ.பி.எஸ். சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக் கிழமை (26-03-2010) அன்று நடைபெற்ற போது, அஞ்சு குப்தா ஆஜரானார். பாபர் மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்க அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று அஞ்சு குப்தா கூறினார்.

1990 ஐ.பி.எஸ். பிரிவைச் சேர்ந்த அஞ்சு குப்தா தற்போது டெல்லியில் இந்திய உளவு அமைப்பான “ரா”வில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

inneram.com

ஆந்திர முஸ்லிம்களுக்கு அளித்த இட ஒதுக்கீடு செல்லும்: அதிரடி தீர்ப்பு அளித்த சுப்ரிம் கோர்ட்டுக்கு நன்றி!

ஆந்திர அரசு முஸ்லிம்களுக்கு அளித்த நான்கு சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்றும் இதை நிறுத்தி வைத்த ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லாது என்ற இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

நியாயத்தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் மற்றும் இதற்கு மேல் முறையீடு செய்து முயற்சி செய்த ஆந்திர அரசுக்கு முஸ்லிம்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!

மேலும் நீதிபதி பாலகிருஷ்ணன் அடங்கிய நிதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் இது பற்றி முழுவதும் விசாரிக்க ஐவர் அடங்கிய பென்ஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு பற்றி ஆங்கிலத்தில் அறிய:

NDTV

PTINews

நக்கீரன் அலுவலகம் முற்றுகை: தவ்ஹீத் ஜமாஅத் அதிரடி அறிவிப்பு!

நான் தான் நபிகள் நாயகம் என்ற தலைப்பிட்டு மார்ச் 23-26 நக்கீரின் இதழில் வெளியான செய்தியை கண்டித்து இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாளை (25-3-2010) சென்னையில் உள்ள நக்கீரன் அலுவகத்தை முற்றுகையிடும்!

நாள்: 25-3-2010

நேரம்: மாலை 3.30 மணி

இடம்: நக்கீரன் அலுவலகம், சென்னை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் அதிரடி ஆர்ப்பாட்டத்திற்கு அணி அணியாய் வாருங்கள்!

முஸ்லிம்களை சீண்டி பார்க்கும் நக்கீரனுக்கெதிரான உங்கள் கண்டனங்களை பதிவு செய்யுங்கள்!

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டக் காட்சிகள் -அதிர்ச்சி வீடியோ!

பக்தியின் பெயரால் மக்களை மாக்களாக மாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரமப் போலிச்சாமியார்களின் வரிசையில், கல்கி பகவான் என்ற பெயரில் விஜயகுமார் என்ற கல்கி விஜயகுமாரும் அவரின் மனைவியும் இணைகிறார்கள். அவர்கள் நடத்தும் ஆசிரமத்தில் ஆண்களும் பெண்களும் போதையில் பைத்தியங்களைப் போன்று நடமாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க…

3 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை தற்கொலை: காளி அம்மனுக்கு பலிகொடுத்த கொடூரம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்த இந்து ஒருவர் , காளிக்கு தனது மூன்று குழந்தைகளையும் கழுத்தை அறுத்து பலி கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள மிர்புர்காஸ் நகரை அடுத்துள்ள மிர்வா கோர்ஜர்னி என்ற இடத்தில் வசித்து வந்தவர் திகம்தாஸ் மெக்வாரின் பெமோமல் (26).

இந்து குடும்பத்தை சேர்ந்த இவர் தனது தாய், மனைவி, குழந்தைகள் பார்வதி (6),ரெனா (4),ஆர்த்தி (1), மற்றும் சகோதரருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். திகம்தாஸ் காளி அம்மனை தினமும் வணங்கி வந்தார். தனது வீட்டின் முதல் மாடியில் சிறிய காளி கோயில் ஒன்றை கட்டி, அதற்கு தினமும் பூஜைகள் நடத்தி வந்தார். நேற்று காலை அவரது மனைவி வெளியே சென்றிருந்தார். அப்போது திகம்தாஸ், குளித்து விட்டு, தனது தாயார் மற்றும் உறவினர் களை சந்தித்து காளிக்கு பரிகாரம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.

பின், தனது வீட்டின் முதல் மாடியில் உள்ள காளி கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்ட திகம்தாஸ், திடீரென ஆவேசமடைந்தவாக தனது மூன்று குழந்தைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக கழுத்தை அறுத்து கொலை செய்தார்.பின்னர், தனது கையின் மணிக்கட்டு பகுதியில் உள்ள நரம்புகளை அறுத்துக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட, மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த அவரது மனைவி வீடு திரம்பினார். வீட்டின் முதல் மாடிக்கு சென்று பார்த்த அவர் தனது மூன்று குழந்தைகளும், கணவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திகம்தாஸின் சகோதரர் முல்சந்த்திடம் கேட்டபோது,’ திகம்தாஸ் ஒரு காளி பக்தன். கோயில் பூசாரி ,’ என்று மட்டும் தெரிவித்தார்.

dinamalar.com

வினாத்தாள் மாறிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண்? 10ம் வகுப்பு தேர்வு குளறுபடியை சரிசெய்ய திட்டம்

Front page news and headlines today

சென்னை : ”பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் நடந்த தமிழ் முதல்தாள் தேர்வில் கேள்வித்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். அப்பாடத்தில் அவர்கள் தோல்வி அடையாத வகையில், தேர்வுத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்,” என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி உறுதி அளித்துள்ளார். குளறுபடி நடந்த இடங்களில் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், ஆசிரியர்களை, இனி தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என்றும், அரசு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்தார்.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, நேற்று முன்தினம் துவங்கியது. எஸ்.எஸ்.எல்.சி., – மெட்ரிக் – ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியன்டல் ஆகிய நான்கு போர்டு மாணவர்களும் கலந்து ஒரு அறையில் தேர்வெழுத வைக்கப்பட்டனர். முதல் நாள், தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது. காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளியில
மேலும் படிக்க…

குஜராத் கலவரம் வழக்கு : சிறப்பு விசாரணைக்குழு முன் நரபலி மோடி 27ம் தேதி ஆஜர்

Top world news stories and headlines detail

ஆமாதாபாத் : குஜராத் வன்முறைகள் தொடர்பாக சாட்சியம் அளிக்க வரும்படி, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அனுப்பிய சம்மனுக்கு இணங்கி வருகிற 27ம் தேதி மோடி விசாரணைக்குழு முன் ஆஜராகிறார்.

குஜராத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின் வன்முறைகள் நிகழ்ந்தன. இதில், ஏராளமானோர் பலியாயினர். இந்த வன்முறைகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. இந்தக் குழு, குஜராத் முதல்வர் மோடிக்கு சம்மன் அனுப்பியது. அதில் மேலும் படிக்க…

விரைவில் இஸ்லாத்தை ஏற்கப்போகும் திருமாவளவன்


நேற்று (21 March) மாலை அசர் தொழுகைக்கு பிறகு பேரா.பெரியார் தாசன் (பேரா.அப்துல்லாஹ்) அவர்களுக்கு சென்னையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டம் எதிர்பார்த்தைவிட மிக அதிகமாக குழுமியிருந்தது. பேரா.அப்துல்லாவின் உரையை கேட்க முஸ்லிம்களை போல – தலித் சகோதரர்களும் ஆவலுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்ததனர். அனைத்து அமைப்புக்களும்’ பங்கேற்கும் என்று அழைப்பிதழில் குறிபிடப்பட்டிருந்தது – அதற்கேற்ப த.த.ஜ தவிர பெரும்பாலான அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அமைப்புக்களும் கலந்துக்கொண்டன.

மேலும் படிக்க…

அழகான முகத்திற்கு ஆலோசனைகள்

முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்… வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்…

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.

சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றhக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா?
கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன்
தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.

ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும்
சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும். eegarai1.wordpress.com