
தமிழக மக்கள் மனதில் இன்று வரை பதிந்து விட்ட ஒரு செய்தி. மாநில அளவிலோ,மாவட்ட அளவிலோ சாதிக்க வேண்டுமானால் புகழ்பெற்ற தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்தாலே அது முடியும் என்பது. அதை மாற்றி புதிய சரித்திரம் படைத்துள்ளார் தெரு தெருவாக ஜவுளி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தும் சேக் தாவூதின் மகள் ஜாஸ்மின்.
தனியார் பள்ளிகள் அடிக்கும் கொள்ளைக் கட்டணத்தில் தன் பிள்ளைகளை சேர்த்தால் மட்டுமே கல்வி தரமானதாக இருக்கும் என்று என்னும் பெற்றோர்கள் இனியாவது அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சிகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அது போல அரசும் கல்வியில் தனிக் கவனம் செலுத்தி அரசுப் பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து தமிழக மக்கள் அரசுப் பள்ளிகளில் முண்டியடித்து தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.
-இறை நேசன்-
Filed under: பொதுவானவை | Tagged: சாதிக்க-அரசுப்-பள்ளியும் | Leave a comment »