மும்பையில் தற்போது என்ஐஏ குழுக்கள் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளன. என்எஸ்ஜி கமாண்டோப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்தும், ஹைதராபாத்திலிருந்தும் மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகக் குழுவினர் மும்பை வந்துள்ளனர்.
நேற்று இரவு மும்பையில் கன மழை பெய்ததால் பல முக்கியத் தடயங்கள் அழிந்திருக்கலாம் என்று போலீஸார் அஞ்சுகின்றனர். இருப்பினும் குண்டுவெடித்த இடங்களை முடிந்தவரை பாதுகாப்புடன் வைத்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையே, தாதர் மற்றும் ஓபரா ஹவுஸ் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன. இதில் சில உருப்படியான தகவல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Filed under: பொதுவானவை | Tagged: மும்பையில்-மூன்று-இடங்கள |
மறுமொழியொன்றை இடுங்கள்