வழிகேடு எனும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்

 

வழிகேடு எனும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்,

ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள் என்ற பழமொழி தமிழகத்தில் தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. மட்டைகள் தண்ணீர் நிறைந்த குட்டையில் நன்றாக ஊறிப்போனால் தான் நன்றாக வளையும் எனவேதான் இவ்வாறு இலக்கிய நயமாக சில பழமொழிகளை தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இன்று இந்த கட்டுரையில் இந்த பழமொழியை நாம் சற்று வித்தியாசப்படுத்தி விளக்க இருக்கிறோம்! வாருங்கள்!

வழிகேடு என்னும் குட்டையில் ஊறிப்போன மட்டைகள் இவ்வாறு கூறுவதற்கு ஒரு காரணம் உள்ளது அதாவது நல்ல குட்டையில் மட்டை ஊறிப்போனால் அது பயனுள்ளதாக அமையும் ஆனல் வழிகேடு என்றும் குட்டையில் ஊறிப்போன மட்டைகளால் யாருக்கேனும் உபயோகம் உள்ளதா? படைத்த இறைவனை வணங்குவதற்கு பல்வேறு முறைகள் இந்த சமுதாய மட்டைகளால் கையாளப்படுகிறது அந்த மட்டைகளை தோலுரித்துக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

மேலும் படிக்க…

முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு வாழ்த்துகள் – கருணாநிதி பக்ரீத் வாழ்த்து!

முஸ்லிம்கள்  கல்வி, தொழில் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய என் வாழத்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தன்னுடைய பக்ரீத் வாழ்த்துச் செய்தியில் தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு:

தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய சமுதாய மக்களால் 17.11.2010 புதன்கிழமையன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

பேரறிஞர் அண்ணா, இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல, ஒரு சிறந்த மார்க்கம். முகம்மது நபிகள் ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக் கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார், அதற்கான ஒரு நல்ல அரசியலையும் ஏற்படுத்தினார் என்று இஸ்லாம் குறித்துக் கூறியுள்ளார்.

அந்த இஸ்லாம் மார்க்க வாயிலாக, மனித குலம் அறிந்திருந்த அனைத்து நற்பண்புகளை விடவும் மிக உன்னதமான பண்புகளைக் கற்றுக் கொடுத்த நபிகள் நாயகம், தாய் தந்தைக்கு நன்றி செய்யுங்கள், அவ்வாறே உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டாருக்கும், எப்பொழுதும் உங்களுடனிருக்கும் சிநேகிதர்களுக்கும், பிரயாணிகளுக்கும், உங்களிடமுள்ள பணியாளர்களுக்கும் அன்புடன் நன்றி செய்யுங்கள் என்று கூறி, மனிதர்கள் அனைவரிடமும் மனித நேயத்தை வளர்த்திடப் பாடுபட்டார்.

மக்கள் பகையை உணர்வில்லாது ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதை நீங்கள் ஒருவருக்கொருவர் தண்டித்து வாழாதீர்கள், பிணங்கிக் கொள்ளாதீர்கள், கோபப்படாதீர்கள், பொறாமை கொள்ளாதீர்கள் என்று அறிவுறுத்தினார்.

நபிகள் பெருமானார் வலியுறுத்திய இத்தகைய இயல்பான, அமைதியான மனித சமுதாய மேம்பாட்டிற்குரிய அறநெறிகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய மக்கள் அனைவரும் கல்வியில், தொழிலில், பொருளாதாரத்தில் மேலும் மேலும் முன்னேற்றம் காண எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Kader.

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: 66 பேர் பலி; 90 பேர் படுகாயம்

Thevar Jayanthi

புதுடெல்லி: புதுடெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 66 பேர் பலியாகி உள்ளார்கள். மேலும் 90 பேர் படுகாயமடைந்தனர். இந்த 4 மாடிக் கட்டிடம் கட்டி முடித்து 15 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. மக்கள் நெரிசல் மிகுந்த கிழக்கு டெல்லியில் லட்சுமி நகரில் 4 மாடி கட்டிடம் நே‌ற்‌றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 66 பேர் உயிரிழந்தனர். 90 பேர் காயமடைந்தனர். இவர்களில் 4 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

மீட்பு பணிகள் தீவிரம்!

தீயணைப்புத் துறையினர், காவல‌‌ர்க‌ள், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சுவதாக காவ‌ல்துறை தெரிவித்து‌ள்ளது. இந்நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.மேலும் படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

15 ஆண்டுகள் நிறைவு!

கிழக்கு டெல்லி லட்சுமி நகரில் உள்ள இந்த 4 மாடிக் கட்டிடம் கட்டி முடித்து 15 ஆண்டுகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளன. இந்த 4 மாடிக் கட்டிடத்தில் 400 மக்களுக்கு மேல் வசிக்கின்றனர்.

யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம்!

சமீபத்தில் பெய்த கனமழையால் யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அப்பகுதி வெள்ளத்தால் சூழ்ந்தது. அதன் காரணமாக கட்டடத்தின் அடித்தளம் பலவீனமடைந்திருக்கலாம் என சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பின் நிதி அமைச்சர் ஏ.கே.வாலியா தெரிவித்தார். இதன் காரணமாக பிரமாண்டமான கட்டிடம் சில நிமிடங்களிலேயே தரைமட்டமானது.

டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று டெல்லி முதல்வர் ஷீலா தட்சித் பார்வையிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்

Dinakaran.