தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் பெரும்பாலும் அறிவாளிகளாகவும் சோம்பேறிகளாகவும் தான் இருப்பார்கள் போலும். அது அவர்கள் தவறில்லை. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வசதிகள் அதிகம். வாய்ப்புகள் அதிகம். கைப்பேசி கட்டணம் முதல் ஆரம்பித்து பஸ் வசதி, ரயில் வசதி, பொழுது போக்கு இடங்கள், அரசாங்கத்தின் கவர்ச்சியான திட்டங்கள் என்று இங்குள்ள மனிதனின் மூளையை எவ்வித சிந்தனையிலும் ஈடுபட விடாமல் எப்போதும் களிப்படைய வைத்து, மழுங்கடித்த சோற்றுப் பிண்டங்களாகத் தான் வைத்திருக்கிறார்கள். எல்லோர் வீட்டிலும் சுட்டி .டி.வி, சன் டி.வி, சன் மியுசிக், கலைஞர் டி.வி, கே டி.வி என்று தமிழ்நாடே ஒரே குடும்பமாகத் தான் வாழ்கிறது. ஒரே குடும்பமாகத் தான் தூங்குகிறது. தேவையான அனைத்தையும் அரசாங்கமும் இந்த சமூகமும் பல வழிகளில் தந்துவிட்டால் சோம்பேறிகளாகாமல் என்ன செய்வோம்?. எல்லாம் கிடைத்த பின் எதற்கு சண்டை, எதற்கு பித்தலாட்டம்.?.
Filed under: பொதுவானவை | Tagged: ரசாயன-சாத்தான்கள்-போபால |
மறுமொழியொன்றை இடுங்கள்