
ரேபரேலி : உ.பி.,யில் காங்., தலைவர் சோனியாவின் பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தியது தொடர்பாக ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், ரயில்வே கேட் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, உ.பி., ரேபரேலி தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள் ளார். தலமு என்ற இடத்தில் இருந்து உன்சாகருக்கு சோனியா சென்று கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு வாகனங்கள் அவருக்கு முன் சென்று கொண்டிருந்தன. அப்போது, ஜலால்பூர் அருகே ரயில்வே கேட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த ஜகதீஷ் என்ற ஊழியர், பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனடியாக, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் தேஸ்ராம் ரவாத், ரயில்வே கேட் ஊழியர் ஜகதீஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இச்சம்பவம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Filed under: பொதுவானவை | Tagged: சோனியா-வாகனத்தை-நிறுத்தி | Leave a comment »