செக்ஸ் சாமியார் நித்தியானந்தா கைது – ரஞ்சிதா என்ன ஆனார்?

கர்நாடக மாநிலம் பிடதி என்ற இடத்தை தலைமை இடமாகக் கொண்டு உலகின் பல்வேறு இடங்களிலும் ஆசிரமங்கள் நடத்தி வந்தவர் பரமஹம்ச நித்யானந்தா. பிரமச்சர்யத்தை போதித்த நித்யானந்தா தன்னுடைய வசீகரமான பேச்சால் உலகம் முழுவதிலும் பக்தர்களை பெற்றவர்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 3 ம் தேதி அன்று தனியார் தொலைக் காட்சிகளில் நித்யானந்தா பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள் ஒளி பரப்பப் பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொது மக்கள் அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கினர்.

அதன் பின் தலைமறைவான செக்ஸ் சாமியார் நித்யானந்தா அவ்வப்போது தன்னுடைய விளக்க விடியோவை தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட்டு வந்தார்.  சில தனியார் தொலைக் காட்சிகளுக்கும் பேட்டி அளித்து வந்தார். போலி சாமியார் நித்யானந்தாவுக்கு  சேவை செய்த நடிகை ரஞ்சிதாவும் தலைமறைவானார்.

இந்நிலையில் கர்நாடக மாநில காவல்துறைக்கு சாமியார் நித்யானந்தா இமாச்சல பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக் வந்த தகவலை அடுத்து கர்நாடக காவல்துறை இமாச்சல பிரதேசத்துக்கு விரைந்தது. இமாச்சல பிரதேச காவல்துறையினரின் உதவியுடன் சோலன் என்ற  இடத்தில் பதுங்கி இருந்த சாமியாரை காவல்துறை கைது செய்தனர். கைது செய்யப் படும் போது வேறு யாரும் அவருடன் இருந்தார்களா என்பது குறித்த தகவல்கள் கிடைக்க வில்லை.

சாமியாரை பெங்களூருக்கு கொண்டு வரும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பார்கள் எனத் தெரிகிறது. 50 நாட்களாக காவல்துறைக்கு தண்ணி காட்டிய நித்யானந்தாவை விசாரணை  நடத்த ஏதுவாக  காவல்துறையினர் போலீஸ்  காவலில் எடுத்து விசாரிப்பார்கள் எனத் தெரிகிறது.

அவரிடம் நடத்தப் படும் விசாரணையில் நடிகை ரஞ்சிதா குறித்த மர்மம் விலகலாம் என்றும் எதிர் பார்க்கப் படுகிறது. சாமியார் நித்யானந்தா மீது அமெரிக்காவிலும் பாலியல்  புகார் அளிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

செக்ஸ் நடிகை ரஞ்சிதா மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

eventsimg

சென்னை: நித்யானந்தன் செக்ஸ் வீடியோவில் இடம்பெற்றிருந்த ரஞ்சிதா மீது நடிவடிக்கைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஆர்.சி.மனோகரன் இன்று ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில் கூறி இருப்பதாவது:

ஆன்மீகப் பணிகளில் பிரபலமான நித்யானந்தா சாமியாருடன் பிரபல நடிகை ரஞ்சிதா படுக்கையில் இருந்த காட்சி சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. நித்யானந்தாவுடன் ரஞ்சிதா இருக்கும் படங்கள் பத்திரி கைகளிலும் வெளியானது.

இது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போன்ற ஆபாச காட்சிகள் மக்கள் மனதை கெடுக்கக் கூடியதாகும்.

இளைய தலைமுறையினரும், பெண்களும் சமுதாய சீரழிவில் சிக்கி விட இது காரணமாக அமையலாம். எனவே ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட நடிகை ரஞ்சிதா மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த மாதம் தபால் மூலம் புகார் கொடுத்தேன்.

ஆனால் போலீஸ் கமிஷனர் என் மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே நடிகை ரஞ்சிதா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறி உள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Entertainment News: