கள்ள பாலியல் உறவு, மது அருந்தவதற்கு துபை இரும்பு கரம்

வளைகுடா நாடுகளிலேயே உலகப் பொதுவர் மாநகர் (Cosmpolitan city) என்று பெயர் எடுத்த துபையில் ஒழுக்க கேடுகளான செயல்கள் தற்போது இரும்புக் கரம் நீட்டி தடுக்கப்பட்டு வருகின்றன.

இரு நுற்றாண்டு காலம் சிறப்பு கொண்ட துபை தனித்துவமிக்க கலாச்சார, பாரம்பரியம் கொண்ட நகரமாக இருந்த வேளையில் கடந்த 50 ஆண்டுகளாக உலக வணிக வர்த்தக சந்தையாக முன்னேறிய வேளையில் அமெரிக்க, ஐரோப்பியா, ரஷ்யா போன்ற நாடுகளின் வர்த்தக மற்றும் சுற்றுலாத் தொடர்புகளால் உள்ளூர் கலாசாரத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உலக பொதுவர் மாநகரமாக பரிமாற்றம் கண்டது. ஆனால் அந்தத் தொடர்பு ஒழுக்க கேடுகளான மாற்றங்களை கொள்ளாத வகையில் தற்போது இரும்புக் கரம் நீட்டப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை (04-04-2010) அன்று பொது இடத்தில் மதுஅருந்தி கட்டியணைத்து முத்தமிட்ட பிரிட்டன் ஜோடியை ஒரு மாதம் சிறையில் அடைத்து தண்டனை வழங்கியுள்ளது துபை நீதிமன்றம். உணவகம் ஒன்றில் கட்டியணைத்து முத்தமிட்ட இந்த 20 வயது ஜோடி, குழந்தைகளுடன் அங்கு உணவருந்திய அரபுத் தாய் ஒருவர் கண்டித்ததின் தொடர்பில் ஏற்பட்ட நடவடிக்கையில் நீதிமன்றம் அந்த பிரிட்டன் ஜோடிக்கு இந்த தன்டைனையை வழங்கியுள்ளது.
மேலும் சென்ற மாதம் ஆபாச குறுந்தகவல் பரிவர்த்தனை செய்த இந்திய ஜோடி ஒன்றுக்கும் மூன்று மாதம் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல அங்கு  புகழ்பெற்ற ‘ஜுமைரா’ எனும் கடற்கரை பூங்காவில் உடலறுவு கொண்ட பிரிட்டன் ஜோடியை மூன்று மாதம் சிறையில் அடைத்து, அவர்களது ‘வீசா’வினை ‘கேன்சல்’ செய்து நாட்டை விட்டு வெளியேற்றியது.

எல்லாவற்றையும்விட மேலாக பிரிட்டன் பெண் ஒருவர் குடித்து விட்டு யாரிடம் உடலுறவு கொண்டோம் எனத் தெரியாத சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். விடுமுறையில் துபை வந்த அவர் ஓட்டல் ஒன்றில் குடித்துவிட்டு அடுத்த நாள் தன்னை ஓட்டல் ஊழியர் ஒருவர் கழிவறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையினரிடம் புகார் செய்தார். ஆனால் ஓட்டல் நிர்வாகம் இதை மறுத்தது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் அந்தப் பெண்ணிடம் உடலியல் சோதனை செய்ததில் அவர் மது அருந்திய பின்பு தனது காதலருடன் விருப்பப்பட்டே உடலுறவு கொண்டுள்ளார் என்பதும் அவர் போதையில் இருந்ததால் யாருடன் உடலுறவு கொண்டோம் என்பதும், இரவில் என்ன நடந்தது என்றும் தெரிந்திருக்கவில்லை என்றும் மேலும், அவர் திருமணம் ஆகாமலே உடலுறவு கொண்டதற்காகவும், தவறாக புகார் அளித்தற்காகவும் அவர் சிறையில் தள்ளப்பட்டார்.

Abdul Kader.

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மதுபான கம்பெனியான கிங்ஃபிஷரின் டீ-சர்ட் அணிந்து விளையாட மறுப்பு.

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காரராக விளங்குபவர் யூசுஃப் பதான். தற்ப்பொழுது ஐ.பி.எல் டுவெண்டி-20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இத்தொடரில் அதிவேக சதமடித்தவர் யூசுஃப் பதான்.

டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கெதிரான போட்டியின் பொழுது மதுபான கம்பெனியான கிங்ஃபிஷரின் சின்னம்(லோகோ) உடைய டீ-சர்ட் அணிய மறுத்துவிட்டார். இதுத் தொடர்பாக யூசுஃப் பதான் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், “கிங்ஃபிஷர் ஆல்கஹால்(மதுபானம்) தயாரிக்கும் நிறுவனமாகும். மதுபானத்தை அருந்துவதோ அல்லது அதன் விற்பனைக்குத் தூண்டுவதான விளம்பரத்தில் பங்கேற்பதோ எனது சொந்த மத நம்பிக்கைக்கு எதிரானது” என்றார் அவர்.

பரோடாவில் உள்ள மஸ்ஜிதில் தனது இளைமை பருவத்தில் வளர்ந்த இவருடைய தந்தை முஅத்தினாக(மஸ்ஜிதில் அதான் கூறுபவர்) பணிபுரிந்து வருகிறார்.
இதுத் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இது ஒரு சிறிய விஷயம். இது அவருடைய சொந்த விருப்பம். அவர் நன்றாக பேட் செய்கிறார். அணி நிர்வாகம் அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காது” என்றார்.

இதற்கு முன் இத்தகையதொரு முடிவை தென் ஆப்ரிக்காவின் கிரிக்கெட் அணியின் சிறந்த வீரரான ஹாஷிம் ஆம்லா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நீண்டநாள் ஸ்பான்சராக செயல்பட்டுவரும் பீர் கம்பெனியான கேசில் லேகர் என்ற நிறுவனத்தின் டீ சர்ட்டை அணிய மறுத்தார். இதற்கு தென் ஆப்பிரிக்க அணியும் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு இலட்சம் கிராமங்களை சென்றடைய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பு முடிவு.


சமீபத்தில் டெல்லியில் ஏகல் வித்யாலயாவினரால் நடத்தப்பட்ட ஏகல் கும்பா என்ற பெரியதொரு விழானினை தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் மோகன் பகவத் தொடங்கி வைத்தார்.வடமேற்க்கு டெல்லியில் உள்ள ரோஹினி என்ற இடத்தில் ஸ்வர்ண ஜெயந்தி பூங்காவில் 12000 திற்க்கும் மேற்ப்பட்ட ஏகல் வித்யாலாவின் உறுப்பினர்களான காட்டில் வசிக்கும் மக்களும் மலையில் வாழும் மக்களும் குழுமியிருந்தனர். இந்த மூன்று நாள் மாநாட்டில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் வனவாசிகள் கலந்து கொண்டனர்.24 ஏக்கரில் 8 நகர மாதிரிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒரு பொதுக்கூட்டம் நடத்தும் இடமும், பெரும் கண்காட்சி நடத்தும் இடமும், வரவேற்பு நிலையமும், மருத்துவ வசதிகளும், மற்றும் அலுவலகங்களும் பூங்காவில் மற்ற 20 ஏக்கரை ஆக்ரமித்திருந்தது.

இந்தியாவின் ரிமோட் பகுதிகளுக்கு கல்வி பணிகளை எடுத்துச் செல்லும் சேவகர்களின் பணிகளை ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பாராட்டிப் பேசினார்.மேலும்,”இந்த கல்விதான் இந்தியாவை தலைசிறந்த நாடாக மாற்றி வருகிறது. எதார்தத்தில் ஏகல் வித்யாலயாக்கள் மூலமாக வெறும் பள்ளிக்கூடங்களை நடத்தவில்லை மாறாக நமது கனவு இந்தியாவை உருவாக்க முயற்ச்சி செய்து வருகிறோம்.”என்று உரையாற்றினார்.

கூடியிருந்த மக்களுக்கு பாபா ராம்தேவ் உரையாற்றும் பொழுது, “இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் பிரதம திட்டம் இந்த ஏகல் இயக்கம் தான். மனித உடல் கோயில் போன்றதாகும். அதில் கடவுளுக்கு சேவை செய்வதே இந்த ஏகல் வித்யாலயா” என்று பகர்ந்தார்.வி.ஹெச்.பி.யின் தலைவர் அசோக் சிங்கால் பேசுகையில்,”சுதந்திரத்தின் செளகரியங்கள் ஏதும் இக்கிராமங்களுக்கு சென்றடையவில்லை.” என்று வருந்தினார்,(!)

1988 ஆம் ஆண்டு ஜார்க்ண்டில் தொடங்கப்பட்ட ஏகல் வித்யாலயா இயக்கம் இன்று 22 மாநிலங்களில் 27110 கிராமங்களில் பரவியுள்ளது. இந்த ஏகல் பள்ளிகளில் 7,78,965 மாணவர்கள் பயிலுகின்றனர். இந்தியாவை ‘சீக்க்ஷித், ஸ்வஸ்த், மற்றும் சம்ரித்’ (அறிவுமிக்க, ஆரோக்கியமான, ம்ற்றும் வளமான) இந்தியாவாக உரூவாக்குவதே தமது குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். சாத்வி ரிதம்பாரா இறுதி உரை நிகழ்த்தஒரு இலட்சம் கிராம்ங்களை சென்றடைய வேண்டும் என்ற முடிவோடு கூட்டம் கலைந்தது.

hinduextremistworld.blogspot.com