Posted on மார்ச் 27, 2010 by Nallur Peer
டெல்லி: குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது, முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈஷான் ஜாப்ரி உள்பட 60க்கும் மேற்பட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைக்கு இன்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
ஆஜரானார். ஆனால் விசாரணைக் குழுத் தலைவர் ஆர்.கே.ராகவன் அப்போது இல்லை.
2002ம் ஆண்டு நடந்த குஜராத் மதக் கலவரத்தின்போது குல்பர்க் சொசைட்டியில் ஜாப்ரி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டனர். மேலும் படிக்க…
Filed under: பொதுவானவை | Tagged: எஸ்ஐடி முன்பு நரபலி மோடி | Leave a comment »
Posted on மார்ச் 27, 2010 by Nallur Peer

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக தலைவர் அத்வானிக்கு எதிராக, அவரது பாதுகாப்பு முன்னாள் அதிகாரி அஞ்சு குப்தா சாட்சியம் அளித்தார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு உத்திரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக, அத்வானியின் பாதுகாப்பு முன்னாள் அதிகாரி அஞ்சு குப்தா ஐ.பி.எஸ். சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக் கிழமை (26-03-2010) அன்று நடைபெற்ற போது, அஞ்சு குப்தா ஆஜரானார். பாபர் மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்க அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று அஞ்சு குப்தா கூறினார்.
1990 ஐ.பி.எஸ். பிரிவைச் சேர்ந்த அஞ்சு குப்தா தற்போது டெல்லியில் இந்திய உளவு அமைப்பான “ரா”வில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
inneram.com
Filed under: பொதுவானவை | Tagged: பாபர் மசூதி இடிப்பு வழக்கு | Leave a comment »