
நித்யா நந்தா…இன்றைய தினம் மீடியாக்களை ஆக்ரமித்த காவிக் காமக் கலைஞர்.
விடாது கருப்பாய் நம்மை வீடியோ தேட வைத்த அடுத்த காவி வித்தகர்..வீடியோவில் மாஸ்க் செய்யப்பட்ட முகம் யாரென பட்டிமன்றம் நடத்த பயன்பட்டவர்.இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இந்த காவி மனிதர்களின் அக்கிரமங்களை..
இது ஒரு புறம் இருக்க தீர்த்தம் என்ற பெயரில் போதைக்கு அடிமையாக்கும் அடுத்த பகவன் அந்தப்புரம்..
சாமியார் போர்வையில் எவ்வளவு சல்லாபங்கள்..காவி போர்வையில் எவ்வளவு களிப்பு..என கிளர்ச்சியுறம் இம்மனிதர்களை கடவுளாய் நம்பும் கூட்டம் மாறவா போகிறது..
அடுத்த காவியை தேடும்..அவனை கடவுலாக்கும்..களிப்புறும்..பின் அவன் லீலை தெரியும் போது பக்தகோடி ஆத்திர மடையும்..கல்வீசும்..பேனர் கிழிக்கும்.
இந்த ஆனந்தாக்கள் வரிசையில் எத்தைனையோ ஆனந்தாக்ளும்,பகவான்களும் படைஎடுத்திருக்கிறார்கள்..படையெடுக்க காத்திருக்கிறார்கள்…பக்தகோடிகளை நம்பி..பக்தர்களே தயாராய் இருங்கள்..அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க..காசு கொடுத்து ஆசிரமம் வளர்க்க…
பின் ஒரு நாள் காவி காம களியாட்டம் வரும்..அன்று கல் எறியவும் உங்களை தயார்ப் படுத்தி கொள்ளுங்கள்..
நன்றி:padaipali.wordpress.com
Filed under: பொதுவானவை | Tagged: கதவை மூடு… | Leave a comment »