![]() |
![]() |
நைஜீரியாவின் ஜனாதிபதி உமர் யார் அடுவா சவுதி அரேபிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நாடு திரும்பிய நிலையிலும் அந்த நாட்டின் துணை அதிபர் குட்லக் ஜோனாதன் தொடர்ந்து நாட்டை வழி நடத்திச் செல்லுவார் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
யார் அடுவாவின் உடல் நிலை மிகவும் மேம்பட்டுள்ளதாக கூறிய ஜனாதிபதியின் பேச்சாளர், ஐனாதிபதிக்கு சிகிச்சைக்கு பின்னான ஒய்வு தொடர்ந்து தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இருதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு ஜீட்டாவில் உள்ள மருத்துவமனையில் மூன்றுமாத காலம் சிகிச்சை பெற்ற பிறகு இன்று அதிகாலை விமானம் மூலம் ஜனாதிபதி தலைநகர் அபூஜா திரும்பினார்.
யார் அடுவா அவர்களுக்கு மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது தெளிவாகவில்லை என்று அபூஜாவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
நன்றி:
Filed under: பொதுவானவை | Tagged: நைஜீரிய ஜனாதிபதியாக |
மறுமொழியொன்றை இடுங்கள்