சத்தியமங்கலம் வனக்குட்டையில் யானைகள் தண்ணீர் குடிக்கும் இடத்தில் பொதுமக்கள் தினமும் கூட்டமாக நிற்பதால், யானைகள் தண்ணீர் குடிக்காமல் மீண்டும் வனப்பகுதிக்குள் தாகத்துடன் திரும்புகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுயானைகள், காட்டெருமைகள், புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகின்றன.
தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் வழியில் வனத்துறையினர் அமைத்துள்ள குட்டையில் தண்ணீர் தேடி காட்டு விலங்குகள் வருகின்றன.
தற்போது யானைகள் அதிகமாக வசிக்கும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தினமும் மாலை நேரத்தில் இந்த வனக்குட்டைக்கு தண்ணீர் குடிக்க யானைகள் படையெடுத்து வருகின்றது. இந்த காட்சியை காண மதியம் 3 மணி முதல் பண்ணாரி அருகே உள்ள வனக்குட்டை முன் இருகர மற்றும் நான்கு கர வாகனங்களை நிறுத்திக் கொண்டு பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள் யானைகள் தண்ணீர் குடிக்க குட்டைக்குள் வந்தவுடன் ஓ.. என்று சத்தமிடுவதும் அருகில் சென்று போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் யானைகள் பயந்து தண்ணீர் குடிக்காமல் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.
யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் கூறுவதை பொதுமக்கள் கேட்பதில்லை.
நன்றி :
Filed under: பொதுவானவை | Tagged: மக்கள் தொந்தரவால் தாகத்துடன் திரும்பும் ‘யானை | Leave a comment »